- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
மன்னன்தன் தேவிமார்* கண்டு மகிழ்வு எய்த*
முன் இவ் உலகினை* முற்றும் அளந்தவன்*
பொன்னின் முடியினைப்* பூ அணைமேல் வைத்துப்*
பின்னே இருந்து குழல்வாராய் அக்காக்காய்!
பேர் ஆயிரத்தான் குழல்வாராய் அக்காக்காய்!
காணொளி
பதவுரை
முன் - வாமநாவதாரகாலத்தில்;
மன்னன்தன் - அஸுரராஜனான மஹாபலியினுடைய;
தேவிமார் - மனைவியர்கள்;
கண்டு - (தன்னுடைய) வடிவைக்கண்டு;
மகிழ்வு எய்த - மகிழ்ச்சி யடையும்படி;
விளக்க உரை
எல்லா இந்திரியங்களையும் ஆகர்ஷிக்கவல்ல வாமநவடிவையும், பிரமசாரி ஆச்ரமத்துக்கு ஏற்றவாறு கொண்ட கோலத்தையும் – மழலைச் சொல் சொல்லும் அழகையும் கண்டு மஹாபலியின் மனைவியரும் மகிழ்ந்தனராம். பொன்னின் = இன் – சாரியை. பூ அணை – புஷ்பம்போல் ம்ருதுவான படுக்கை யென்றுமாம்.
English Translation
Long ago when he came as a beautiful manikin, the wives of King Bali were pleased to see him. Then he grew and measured the whole Universe. He has a thousand names. O Raven, rest his golden locks on a flowery support and comb it from behind, come and comb his hair.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்