- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
கற்றினம் மேய்த்துக்* கனிக்கு ஒரு கன்றினைப்*
பற்றி எறிந்த* பரமன் திருமுடி*
உற்றன பேசி* நீ ஓடித் திரியாதே*
அற்றைக்கும் வந்து குழல்வாராய் அக்காக்காய்!
ஆழியான்தன் குழல்வாராய் அக்காக்காய்!
காணொளி
பதவுரை
கன்று இனம் மேய்த்து - கன்றுகளின் கூட்டத்தை மேய்த்துவந்து;
உற்றன - (உன் ஜாதிக்குத்) தகுந்தவற்றை;
பேசி - சொல்லிக்கொண்டு;
ஓடி - அங்குமிங்கும் பறந்து;
திரியாதே - திரியாமல்;
விளக்க உரை
முள்ளை முள்ளாற் களைவதுபோல அஸுரனை அஸுரனைக் கொண்டெ களைந்தனன் என்க. கன்று + இனம் = கன்றினம். அற்றைக்கும் – ‘அன்று’ என்னும் மென்றொடர்க் குற்றியலுகரம், வன்றொடராய் ஐகாரச்சாரியை பெற்று ‘அற்றை’ என்றாகும். அதன்மேல், கு – சாரியை. ஆழியான் – “ஆழி கொண்டுன்னை யெறியும்” என்றவிடத்துக் கருத்தை நினைக்க.
English Translation
When grazing the calves he picked up a calf by its feet, swirled it and let it go, hitting a wood-apple tree. O Raven, now do not go around chattering come here and comb the coiffure of the Lord who w
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்