விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    தெள்ளியீர்! தேவர்க்கும்*  தேவர் திருத்தக்கீர்!* 
    வெள்ளியீர் வெய்ய*  விழுநிதி வண்ணர்*  ஓ!
    துள்ளுநீர்க்*  கண்ணபுரம் தொழுதாள் இவள்- 
    கள்வியோ,*  கைவளை கொள்வது தக்கதே?  (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

தெள்ளியீர் - தெளிந்த அறிவு உடையவரே!
தேவர்க்கும் தேவர் - தேவாதி தேவரே!
திரு தக்கீர் - பெரிய பிராட்டியார்க்குத் தகுதி யானவரே!
வெள்ளியீர் - சுத்தமான ஸ்வபாவத்தை யுடையவரே!
வெய்ய விழு நிதி வண்ணர் - காய்ச்சின சிறந்த பொன் போன்ற நிறமுடையவரே!

விளக்க உரை

என் பெண் பிள்ளை திருக்கண்ணபுரத்தைத் தொழுதாளென்பதையே வியாஜமாகக் கொண்டு இவளுடைய கைவளையைக் கொள்ளை கொள்வது தகுதியோ சொல்வீர் என்று சௌரிப்பெருமாளை மடிபிடிக்கிறாள் திருத்தாய். இவளுடைய கைவளைகளை அவர் கொள்வதாவது என்னவெனில், பிரிவாற்றாமையினால் இவள் உடம்பு இளைத்துக் கைவளைகள் கழன்று விழும்படியாவதாம். இவளை நீர் இப்படி ஈர்க்கும்போல் இளைத்துப்போம்படி செய்தீரே, இது தகுதிதானோ? நித்ய ஸம்ச்லேஷத்தைக் கொடுத்து இவளுடம்பைப் புஷ்டியாக்குவதன்றோ தகுதி என்றாளென்க.

English Translation

O wise one, Lord of gods, Blameless one, Fit person for Sri, Lord of golden hue! My daughter only folded her hands in the direction of dancing-waters-kannapuram. Was that a crime? Is it proper to confiscate her bangles?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்