விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பரனே! பஞ்சவன் பூழியன் சோழன்*  பார்மன்னர் மன்னர் தாம் பணிந்துஏத்தும்- 
    வரனே! மாதவனே! மதுசூதா!*  மற்றுஓர் நல்துணை நின்னலால் இலேன்காண்*
    நரனே! நாரணனே! திருநறையூர்!*  நம்பீ எம்பெருமான் உம்பர் ஆளும்- 
    அரனே*  ஆதிவராகம் முன்ஆனாய்!*  அழுந்தூர் மேல்திசை நின்ற அம்மானே!*

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பார் மன்னர் மன்னர் தாம் - பூமிக்கு ராஜாதி ராஜர் களானவர்கள்
பணிந்து ஏத்தும் - பணிந்து துதிக்கும் படியான
வரனே - சிறந்தவனே!
மாதவனே - திருமாலே!
மதுசூதா - மதுவென்னு மசுரனைக் கொன்றவனே!

விளக்க உரை

ஒத்தாது மிக்காரை யுடையனாகாதவனே !, பஞ்சவ னென்றும் பௌழிய னென்றும் சோழனென்றும் சொல்லப்படுகிற ராஜாதி ராஜர்கள் பணிந்தேத்தும் படியாக வுள்ளவனே!, திருமாலே, வேதவிளக்கைக் கொள்ளை கொண்டு உலகமெங்கு மிருள்மூடச் செய்த மதுகைபடர்களைக் கொன்றொழித்தவனே!, ஸ்ரீ பதரிகாச்ரமத்தில் நரனென்னுஞ் சிஷ்யனாகவும் நாராயணனென்னும் ஆசார்யனாகவும் வடிவெடுத்து ஆசார்ய சிஷயக்ரமத்தை யுணர்த்தித் திருமந்திரத்தை வெளியிட்டருளினவனே! உன்னையன்றி மற்றொரு நற்றுணையுடையேனல்லே னென்கிறார்.

English Translation

Chola Kings Panchavan, Pouliyan, Cholan, rulers of kings on Earth worship you here. Excellent Madava, Madhusudana, other than you there is no refuge, see! Lord who was Nara-Narayana then, Lord who is Tiru-narayiur resident! Lord who is Siva and Adi-varaha, Lord-in-residence in Western-Alundur!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்