விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    திருவுக்கும் திருஆகிய செல்வா!*  தெய்வத்துக்குஅரசே! செய்ய கண்ணா* 
    உருவச் செஞ்சுடர்ஆழி வல்லானே!*  உலகுஉண்ட ஒருவா! திருமார்பா!*
    ஒருவற்குஆற்றிஉய்யும் வகைஇன்றால்*  உடன் நின்று ஐவர் என்னுள்புகுந்து*  ஒழியாது- 
    அருவித் தின்றிட அஞ்சி நின்அடைந்தேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே!*  (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

உருவம் செம் சுடர் ஆழி வல்லானே - அழகிய வழிவை யுடைத்தாய் செவ்விய சுடர்மயனான திருவாழியை (ப்ரயோகித்தலில்) ஸமர்த்தனே!
உலகு உண்ட ஒருவா - (பிரளயத்தில்) உலகங்களை யமுதுசெய்த அத்விதீயனே!
திரு மார்பா - பிராட்டியைத் திருமார்பிலுடையவனே!
அழுந்தூர் - திருவழுந்தூரில்
மேல் திசை நின்ற அம்மானே - மேலைத்திசையில் எழுந்தருளியிருக்கும் பெருமா

விளக்க உரை

பஞ்சேந்திரியங்களில் தனித்தனி ஒவ்வொரு இந்திரியத்திற்கே ஆடல் கொடுப்பது அரிது; அப்படியிருக்க ஐந்து இந்திரியங்களையும் உடனிருத்தினால், அவை தாம் ‘எனக்கு வேண்டிய விஷயத்தைக் காட்டு, எனக்கு வேண்டிய விஷயத்தைக் காட்டு’ என்று மூலையடியே இழுத்துக் கொலை செய்தால் நான் எங்ஙனே வாழ்வது? இவை இன்னமும் என்னை எவ்வாறு நலியத் தேடுகின்றனவோவென்று சாலவும் அஞ்சி, அஞ்சினார்க்குப் புகலிடமான உன் திருவடிகளை வந்து பற்றினேன்; நீயோ தெய்வத்துக்கரசு;­- இந்திரியங்களுக்கு வசப்படாத ஒரு நாட்டை ஆள்பவன்; என்னையும் அந்தநாட்டிலே புகுவிக்க வல்லையல்லையோ? செஞ்சுடராழி வல்லானான நீ இவ்வைவர் மேல் ஆழி விடுத்துக் காரியஞ் செய்ய மாட்டிற்றிலையோ? அன்றொருகால் உலகுண்டு நோக்னாயென்று ஏட்டுப் புறத்திலே கேட்டுப் போகாமே இன்று என்னைக் காத்தருள்வாய். திருமார்பனான நீ அத்திருவின் பரிகாரமான அடியேனுக்கு இத்தனை யருள் செய்கை மிகையோ என்றாராயிற்று. மூன்றாமடியில் “உய்யும் வகை யென்றால்” என்றே எங்கும் பாடம் வழங்கி வருகின்றது; இப்பாடத்திற்கு ஒரு பொருளும் சொல்லப் போகாது; வியாக்கியானத்திற்கும் இணங்காது : “ஒருவற்கு ஆடல் கொடுத்து உஜ்ஜீவிக்கும் படியாயிருக்கிறதில்லை” என்பது பெரியவாச்சான் பிள்ளை ஸ்ரீஸூக்தி. ஆகவே, “ஒருவற்காற்றி உய்யும் வகை அன்றால்” என்னும் பாடமே பொருந்தத் தக்கது என்று அழகிய மணவாளச்சீய ரருளிச் செய்யும்படி. ‘அன்று ஆல்’ என்று பிரிக்க : ஆல் – ஐயோ வென்றபடி. ஐவர் – அஃறிணையான பஞ்சேந்திரியங்கைள ‘ஐவர்’ என்று உயர்த்திக் கூறியது, அவற்றின் மேல் தமக்குள்ள சீற்றமிகுதியையும், அவற்றின் கொடுமைக் கனத்தையும் காட்டுதற்கென்க : திணைவழுவமைதி.

English Translation

Wealth of the wealth-lady, wealth-laden-cloud hued, eyes like the lotus and king of the gods, O! Beautiful radiant discus wielder! swallower of the worlds, Bearer of Sri! when even one sense is hard to fulfill, five of them have entered all of the same time! not able to bear their pressure I came to you Lord-in-residence in Wester-Alundur!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்