- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
கீழ் ஒன்பது பாசுரங்களிலம் பாகவத நிஷ்டையைப் பேசியிருந்தும், பயனுரைக்குமிப் பாசுரத்தில் “தண்சேறையம்மான் தன்னை” என்று எம்பெருமான் விஷயமாக இத்திருமொழி அருளிச்செய்யப்பட்ட தென்று தலைக்கட்டுகிறார் – பாகவதர்களுக்கு உத்தேச்யன் என்கிற முறைமையால் எம்பெருமானும் தமக்கு உத்தேச்யன் என்கிற திருவள்ளத்தைக் காட்டுதற்கு. இத்திருமொழியைத் திருச்சேறைப் பெருமானுடைய திருவடிகளிலே உங்களுடைய கைகளால் கொண்டு சூட்டுங்கள் என்று தொண்டர்களை நோக்கிச் சொல்லுகிறார் – இத்திருமொழிகற்கைக்கு வேறொருபயன் வேண்டா; எம்பெமானுடைய திருவடிகட்கத் தாமரைப்பூப்போல அலங்காரமாயிருக்கத்தக்க இத்திருமொழி ஸ்வயம் போக்யம் என்று காட்டினபடி. திருச்சேறைப் பெருமானை ஸேவிக்கப்போமவர்கள் *செண்பகமல்லிகையோடு செங்கழுநீரிருவாட்சி யென்னப்டுகிற புஷ்பங்களை ஸமர்ப்பிக்கத் தேடவேண்டா; இத்திருமொழியை அநுஸந்தித்துக் கொண்டு செல்லுமளவிலே பூவிட்டதற்கும் மேலான எம்பெருமானுடைய திருவுள்ளம் உவக்கும் என்பதை உய்த்துணர்க. மூன்றாமடியில், வாம் – வாவும் என்றபடி; வாவுதல் - தாவுதல்; திருமங்கையாழ்வாருடைய குதிரைக்கு இட்ட விசேஷணம் : செய்யுமெனெச்ச வீற்றுயிர் மெய்சேறலும்” என்ற நன்னூற் சூத்திரத்தால் எச்சத்து உயிர்மெய்கெட்டது. மான் – குதிரைக்கும் பெயர்
English Translation
This is a garland of songs by war Lord Parkalan, Kalikanri, on the Lord of Tiruccherai, amid groves where swans pairs imitate the gait of coiffured dames, then give up and rest under Mango trees in company. Devotees, offer this as worship to the Lord's golden feet with folded hands.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்