விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    இனி எப் பாவம் வந்து எய்தும்? சொல்லீர்*  எமக்குஇம்மையே அருள்பெற்றமையால்*  அடும் 
    துனியைத் தீர்த்து இன்பமே தருகின்றது ஓர்*  தோற்றத் தொல் நெறியை*  வையம் தொழப்படும்
    முனியை வானவரால் வணங்கப்படும் முத்தினை*  பத்தர் தாம் நுகர்கின்றது ஓர் 
    கனியை*  காதல் செய்து என் உள்ளம் கொண்ட கள்வனை இன்று கண்டுகொண்டேனே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

இம்மையே - இஹலோகத்திலேயே
அருள் பெற்றமையால் - எம்பெருமானுடைய திருவருளைப் பெற்றேனாதலால்
இனி - இனிமேல்
எமக்கு - எம்மை
எப் பாவம் - எவ்விதமான பாவம்

விளக்க உரை

பாசுரந் தொடங்கும்போதே “இனி யெப்பாவம் வந்தெய்தும் சொல்வீர்” என்று கம்பீரமாகத் தொடங்குகிற மிடுக்கு நோக்கத்தக்கது. இனிப் பரமபதமென்று வேறொரு ஸ்தாநவிசேஷமுண்டென்றும் அங்குப்போய்ப் பெறவேண்டிய பேறு வேறொன்று இருக்கின்றதென்றும் தாம் கொண்டிலாமையைத் தெரிவிக்கின்றார் ‘இம்மையே அருள் பெற்றமையால்’ என்று. ஸகல பாபங்களும் தொலைந்து பெறவேண்டிய பேறு இப்பிறவிதன்னிலே இவ்வுலகந்தன்னிலே பெறப்பட்டதாதலால் இனி ஒரு பாவமும் என்னை வந்து அணுக ப்ர ஸக்தியில்லை யென்கிறார். அடுந்துனியைத் தீர்த்து = துனி என்று துன்பத்திற்குப் பெயராயினும் துன்பத்திற்கு மூலகாரணமான கருமம் இங்கே பொருளாகக் கடவது; என்ற சரமச்லோகத்தின்படியே ஸகல பாபங்களையுந் தொலைத்தருளி நித்யமான ஆநந்தத்தைத் தந்தருளவல்ல ஸித்தோபாயமான எம்பெருமானைக் கண்டுகொண்டேனென்கிறார். இத்யாதி ச்ருதிகளை உட்கொண்டு எம்பெருமானை ‘நெறி’ என்னுஞ் சொல்லாற் சொல்லுகிறார். தன்னையடைதற்குத் தானே மார்க்கமாயிருப்பனிறே எம்பெருமான்.

English Translation

In this world and life, he has given me his grace, now no karma can gather to demean me. He is the temple-path of flower worship. He is the Lord to whom gods offer worship. He is a fruit of rare taste to devotees. He is the sly wicked lover who took all of me, wipring out my sins, he has made my living sweet, pearly lustered Lord, - I have seen him here today.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்