விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மன் அஞ்ச ஆயிரம் தோள்*  மழுவில் துணித்த மைந்தா* 
    என் நெஞ்சத்துள் இருந்து*  இங்கு இனிப் போய்ப் பிறர் ஒருவர்* 
    வல் நெஞ்சம் புக்கு இருக்க ஒட்டேன்*  வளைத்து வைத்தேன்* 
    நல் நெஞ்ச அன்னம் மன்னும்*  நறையூர் நின்ற நம்பீயோ!* 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மன் அஞ்ச – க்ஷத்திரியர்களெல்லாரும் அஞ்சும்படியாக
ஆயிரம் தோள் – (கார்த்த வீரியார்ஜுநனுடைய) ஆயிரந் தோள்களையும்
மழுவின் – கோடாவிப்படையினால்
துணித்த – அறுத்தொழித்த
மைந்தா – மிடுக்கனே?

விளக்க உரை

“என்னெஞ்சினுள்ளே வந்தாயைப்போக வொட்டேன்” என்று நிர்ப்பந்தித்த ஆழ்வாரை மீறிக்கொண்டு புறப்பட்டுப் போகநினைத்த எம்பெருமான் அதற்குறுப்பான தன்மிடுக்கைக் காட்டினான்; ‘அந்தமிடுக்கில் ஒருகுறையுமில்லை, நானறிவேன் பிரானே!’ என்று தாமறிந்த மிடுக்கொன்றை விரித்துரைக்கின்றார் முதலடியில், ராஜலோகமெல்லாம் அஞ்சும்படி அவர்கட்கு வேர்ப்பற்றான ஸஹஸ்ரபாஹ்வர்ஜுநனுடைய தோள்களாயிரத்தையும் மழுவினால் துணித்த மிடுக்கனே!, நீ செய்ய நினைக்குங் காரியத்திற்கு ஒரு இடையூறு நேருமென்று நினைப்பவனல்லேனடியேன்; உன்னுடைய மிடுக்குக்கு இசையாதவனுமல்லேன்; அந்த மிடுக்கை விதேயனான அடியேனிடத்திலே உபயோகிக்க வேண்டாவென்பதே வேண்டுகோள் என்பது உள்ளுறை. பிறரொருவர் வன்னெஞ்சம் புக்கிருக்கவொட்டேன் = தம்முடைய நெஞ்சு தவிர மற்றை யோருடைய நெஞ்சு எல்லாம் வல்நெஞ்சு என்றும் தம்முடைய நெஞ்சு ஒன்றே மெல்நெஞ்சு என்றும் நினைத்திருக்கிற ராழ்வார். உண்மையில், பகவத் விஷயத்தில் இத்தனை உருக்கம் மற்றையோர்க்கு இல்லையிறே. வளைத்து வைத்தேன் = ஏழைகளா யிருப்பவர் செல்வர் மாளிகை வாசலைப் பற்றிக்கொண்டு ‘யாம் வேண்டுகின்றவற்றை நீ தந்தாலன்றி உன்னைவிட மாட்டோம்’ என்ற உறுதியுடன் அவர்களை வளைமத்துக்கொண்டிருப்பது போலவும், பரதாழ்வான் சித்திரக்கூடத்தேறப் போந்து இராமபிரானை வளைத்துக் கொண்டாற் போலவும்.

English Translation

O Lord with an axe that destroyed thousand mighty kings in your! Leaving my heart if you go to stay in another person's heart, I shall not be party to it, stay put in my heart, Obey! Swan-gait Lady's too with you, Naraiyur Lord-in-residence, O!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்