- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
உலகங்களையெல்லாம் பிரளயங் கொள்ளப்புகுந்தவாறே அனைத்தையும் திருவயிற்றடக்கி மிகுஞானச் சிறுகுழவியாய் ஒரு சிற்றாலந்தளிரிலே துயில் கொண்டாய் என்பதைக் கேட்டார்வாய்க் கேட்டிருந்தேன்; அந்தத் திருவுருவத்தோடு இன்று என்னெஞ்சினுள்ளே வந்து உறைகின்றபடியை நன்கு தெரிந்துகொண்டேன்; மற்றையாரைப் போலே நான் நன்றியுணர்வு கெட்டவனல்லேன்; இப்பெருநன்றியைச் சிந்தியாமல் ஒருபொழுதும் நானிருப்பதில்லை என்கிறார். ஆலிலைமேலுறைவாய் என்னெஞ்சினுள்ளே உறைவாய் = ஆலிலைபோலே என்னெஞ்சையும் உரிய இடமாகக் கொண்டாய் என்றாவது, ஆலிலையை இகழ்ந்திட்டு என்னெஞ்சை இடமாகக் கொண்டாய் என்றாவது, கருத்துக்கொள்ளலாம். அணிவண்டு கிண்டும் நறைவாரும் பொழில்சூழ் நறையூர்நின்ற நம்பீயோ – பரமபோக்யமான திருநறையூர்ப்பதி உனக்கு இருப்பிடமாக அமைந்திருக்கச் செய்தேயும் அதனையும் விட்டு என்னெஞ்சிலே உறைகின்றாயாதலால் உன்விஷயத்திலே அடியேன் சாலவும் க்ருதஜ்ஞனா யிராநின்றேனென்றவாறு.
English Translation
Came as babe, you swallowed all and seeping, lay on a floating leaf! Lord eternal staying in my heart, unknown to me then! Nectar-dripping groves with bumble-bees surround your temple. How can I now forget you, Naraiyur lord-in-residence, O!
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்