விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கல் ஆர் மதிள் சூழ்*  கச்சி நகருள் நச்சி*  பாடகத்துள் 
    எல்லா உலகும் வணங்க*  இருந்த அம்மான்*  இலங்கைக்கோன்
    வல் ஆள் ஆகம் வில்லால்*  முனிந்த எந்தை*  விபீடணற்கு 
    நல்லானுடைய நாமம் சொல்லில்*  நமோ நாராயணமே.  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நச்சி – வஸிக்கவிரும்பி
எல்லா உலகும் வணங்க – லோகமெல்லாம் வணங்குமாறு
பாடகத்துள் – திருப்பாடமென்னுந் திருப்பதியில்
இருந்த – வீற்றிருக்கின்ற
அம்மான் – ஸ்வாமியும்,

விளக்க உரை

பாடகம் = பெரிய காஞ்சீபுரத்திலுள்ள பாண்டவதூதர் ஸந்நிதி. ‘பாடும் அகம்’ என்று பிரிக்க. பெருமைதோற்ற எழுந்தருளியிருக்கும் தலம் என்க. கண்ணபிரான் பாண்டவதூதனாய்த் துரியோதனனிடஞ் சென்றபொழுது துரியோதனன் ரஹஸ்யமாகத் தனது ஸபாமண்டபத்தில் மிகப்பெரிய நிலவறையொன்றைத் தோண்டுவித்து அதில் அனேக மல்லர்களை ஆயுதபாணிகளாய் உள்ளேயிருக்க வைத்து அப்படுகுழியைப் பிறர் அறியவொண்ணாதபடி மூங்கிற் பிளப்புக்களால் மேலேமூடி அதன்மேற் சிறந்த ரத்நாஸநமொன்றை அமைத்து அவ்வாஸநத்தில் கண்ணனை வீற்றிருக்கச் சொல்ல, அங்ஙனமே ஸ்ரீக்ருஷ்ணன் அதன்மேல் ஏறின மாத்திரத்திலே மூங்கிற்பிளப்புக்கள் முறிபட்டு ஆசனம் உள்ளிறங்கிப் பிலவறையிற் செல்லுமளவில், அப்பெருமான் மிகப்பெரிதாக விச்வரூபமெடுத்துப் பல கைகளையும் கால்களையுங்கொண்டு எதிர்க்கவே அப்பிலவறையிலிருந்த மல்லர்கள் அழிந்தனர். அப்போது கொண்ட விச்வரூபத் திருக்கோலத்திற்கு ஸ்மாரகமாகப்பெரிய திருமேனியோடே ஸேவைஸாதிக்குமிடம் பாடகம் பாடு – பெருமை. அகம் – ஸந்நிதி. (“அரவுநீள் கொடியோனவையுளாசனத்தை அஞ்சிடாதே யிட, அதற்குப் பெரியமாமேனி அண்டமூடுருவப் பெருந்திசை யடங்கிட நிமிர்ந்தோன்” என்ற (பெரியதிருமொழிப்) பாசுரத்தில் அநுஸந்தி்க்கப்பட்ட திருமேனி வளர்த்தியோடே ஸேவைஸாதிக்குமாறு காண்க.

English Translation

The Lord who resides in the well fortified city of Kanchi, worshipped by all the worlds in Padakam, the Lord who rained arrows or the mighty chest of the Lanka king Ravana, then gave the kingdom to his younger brother Vibhishana, -his Mantra is Na-ma Na-ra-ya-na-me.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்