விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பூணாது அனலும்*  தறுகண் வேழம் மறுக*  வளை மருப்பைப் 
    பேணான் வாங்கி*  அமுதம் கொண்ட பெருமான் திரு மார்வன்*
    பாணா வண்டு முரலும் கூந்தல்*  ஆய்ச்சி தயிர் வெண்ணெய்* 
    நாணாது உண்டான் நாமம் சொல்லில்*  நமோ நாராயணமே.  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

தறுகண் – வட்டமான கண்களையுடையதுமான
வேழம் – (குவலயாபீடமென்னும்) யானையானது
மறுக – குடல்குழம்பும்படி
பேணான் – அதை மதியாதவனாய்
வளை மருப்பை – (அதன்) வளைந்தகொம்புகளை

விளக்க உரை

தறுகண்வேழம் = “ஜாதிப்ரயுக்தமான வட்டணித்த கண்ணையுடைத்தாயிருக்கிற குவலயாபீடம்” என்பது வியாக்யான வாக்கியம். ‘தறுகண்மை’ என்று அஞ்சாமைக்குப் பேராதலால் இங்குத் தறுகண் என்று முழுச்சொல்லாய் ‘ஒருவர்க்கும் அஞ்சாதிருந்த யானை’ என்று பொருளாகவுமாம். இரண்டாமடியில் “அமுதங்கொண்ட பெருமான்” என்ற விடத்திற்கு வியாக்யான மருளாநின்ற பெரியவாச்சான் பிள்ளை “கடலைக்கடைந்து அம்ருதத்தை வாங்கி அது புஜித்தார்க்கு வரக்கடவ ப்ரீதி தனக்குண்டாம்படி யிருந்தான்” என்று அருளிச் செய்திருப்பது கொண்டு சிலர் “அமுதங் கொண்டுகந்த பெருமான்” என்று பாடமோதுவர்; அது மறுக்கத்தக்கதே; யாப்பிலக்கணத்திற்கு ஒவ்வாது. பாடமுமன்று. மேல் பதினோராம் பத்தில் (11-7-1.) “நீணாகஞ்சுற்றி நெடுவரைநட்டு ஆழ்கடலைப், பேணான் கடைந்து அமுதங்கொண்டுகந்த பெம்மானை” என்றுள்ள பாடம் இவ்விடத்திற்கு வேண்டா. ஆகில், பெரியவாச்சான்பிள்ளையின் வியாக்கியான வாக்கியம் பொருந்துமாறென்? எனில்; பொருந்தாமை யொன்றுமில்லை. ‘உகந்த’ என்பதற்குப்பொருளாக அருளிச்செய்தாரல்லர்; ‘அமுதம் தந்த’ என்னவேண்டியிருக்க, அங்ஙனருளிச் செய்யாமல் “அமுதங்கெண்ட” என்று தன்பேறாக ஆழ்வார் அருளிச் செய்திருப்பதற்குக் கருத்துரைத்தாரத்தனை. அவ்விடத்து அரும்பதவுரையாலும் இது விளங்கும்.

English Translation

The Lord who plucked the tusk of the red-eyed hot-tempered elephant, the Lord who churned the ocean for ambrasia, the Lord who bears the lady Sri on his chest, the Lord who stole the coif-fured cowherd dames butter,-his Mantra is Na-ma Na-ra-ya-na-me.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்