விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வள்ளி கொழுநன் முதலாய*  மக்களோடு முக்கணான் 
    வெள்கி ஓட*  விறல் வாணன் வியன் தோள் வனத்தைத் துணித்து உகந்தான்*
    பள்ளி கமலத்திடைப் பட்ட*  பகு வாய் அலவன் முகம் நோக்கி* 
    நள்ளி ஊடும் வயல் சூழ்ந்த*  நறையூர் நின்ற நம்பியே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வள்ளி கொழுநன் முதலாய - வள்ளியம்மைக்கு நாதனான ஸுப்ரஹ்மண்யன் முதலான
மக்களோடு - புத்திரர்களோடு கூட
முக்கணான் - முகக்ண்ணனான ருத்ரன்
வெள்கி ஓட - வெட்கமடைந்து (எதிர் நிற்க மாட்டாமல் முதுகுகாட்டி) ஓடிப்கோக
விறல் வாணன் - பலிஷ்டனான பாணாஸுரனுடைய

விளக்க உரை

“பள்ளிகமலத்திடைப்பட்ட பகுவாயலவன் முகம் நோக்கி நள்ளியூடும் வயல்சூழ்ந்த” என்ற பின்னடிகட்குப் பட்டர் அருளிச்செய்யும் அர்த்த விசேஷம் குறிக்கொள்ளத்தக்கது. தாமரைப்பூவில் படுத்துக்கொண்டிருந்த ஆண் நண்டின் முகத்தைப் பெண் நண்டு பார்த்து ஊடல் செய்யப்பெற்ற வயல் சூழ்ந்த நறையூர் என்று மூலத்திலுள்ளது. இதன் ஆழ்பொருளைப் பட்டர் அழகாக வுரைத்தருள்வராம் : எங்ஙனேயென்னில்; - ஒரு ஆம்பல் மலரிலே நண்டு தம்பதிகள் இனிதுவாழ்கையில் கர்ப்பிணியான பேடைக்கு இனியவஸ்துக்களைக் கொணர்ந்து தரவேணுமென்று அலவன (ஆண்நண்டு)க்கு ஆசையுண்டாயிற்று; பிறகு தாமரைப்பூவிலிருந்து நல்ல மகரந்தத்தைத் திரட்டிக் கொணர்ந்து கொடுப்போமென்று விரும்பி மெல்லமெல்ல நகர்ந்து தாமரைப்பூவிலே சென்று சேர்ந்தது; அவ்வளவிலே ஸூர்யன் அஸ்தமிக்கவே அத்தாமரைமலர் மூடிக்கொள்ள அதனுள்ளே அகப்பட்டது அது; தாமரையை மலர்த்திக்கொண்டு எப்படியாவது வெளிக்கிளம்பிவிட வேணுமென்று எவ்வளவோ முயற்சிகள் செய்துபர்த்த வளவிலும் ஸூர்யோதயமானாலல்லது தாமரை மலராதாயிற்று;

English Translation

The Lord of Naraiyur then in yore chopped the thousand arms of Bana while the three-eyed Siva and his son and retinue took to flight. The Pincer-crob mole goes to sleep in the lotus flower buds of water tanks the female waiting all night long quarrels on his return to the fields.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்