விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஒளியா வெண்ணெய் உண்டான் என்று*  உரலோடு ஆய்ச்சி ஒண் கயிற்றால்* 
    விளியா ஆர்க்க ஆப்புண்டு*  விம்மி அழுதான் மென் மலர்மேல்*
    களியா வண்டு கள் உண்ண*  காமர் தென்றல் அலர் தூற்ற* 
    நளிர்வாய் முல்லை முறுவலிக்கும்*  நறையூர் நின்ற நம்பியே. 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஒளியா - மறைந்து நின்று
வெண்ணெய் - வெண்ணெயை
உண்டான் என்று - விழுங்கின குற்றத்திற்காக
ஆய்ச்சி - யசோதையானவள்
விளியா - கோபித்து

விளக்க உரை

யசோதைப்பிராட்டி தடாக்களிலே சேமித்துவைத்த வெண்ணெய் முதலியவற்றைக் களவுவழியாலே கைப்பற்றி அமுதசெய்த குற்றத்திற்காகத் தாம்பினால் கட்டுண்டு விக்கியழுத பரமஸுலபன் திருநறையூர்நம்பி காண்மின். இவ்விடத்துப் பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியானத்தில் ஒரு ஐதிஹ்ய மருளிச் செய்யப்படுகிறது; அதாவது – “வங்கிப்புரத்து நம்பி பலகாலும் ‘திருவாராதன மருளிச்செய்யவேணும்’ என்று போருமாய் அவஸரஹாநியாலே அருளிச்செய்யாதே போந்தாராய், திருமலையிலே யெழுந்தருளியிருக்கச்செய்தே, ஆழ்வானுக்கும் நம்பி ஸ்ரீ ஹநுமத்தாஸர்க்கும் அதுதன்னை யருளிச்செய்தாராய்ச் சமைகிற வளவிலே நம்பி தோற்ற, திருவுள்ளம் துணுக்கென்றஞ்சி அப்போதருளிச்செய்த வார்த்தை:– ‘என்றுமுள்ள இஸ்ஸம்ஸயம் தீரப்பெற்றோமாகிறது; நியாமகன் நியாம்யங்களிலே சிலர்க்கு அஞ்சிக் கட்டுண்டு அடியுண்டு அழுது நின்றானென்றால் இது கூடுமோ என்றிருந்தோம்; இன்று இரண்டு இழவுக்கும் நம்முடைய ஹ்ருதயம் அஞ்சி நொந்தபடியால் அதுவும் கூடும் என்று”. என்பதாம்.

English Translation

The Lord of Naraiyur came as a child and stole the white butter, -when his mother in anger bound him to a mortar, -stood weeping. Bumble bees drink nectar-wine, the cool breeze blows and tells everyone. The bearming Mullai flowers hearing this, grin and show their mocking smile.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்