விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    அம்பரமும் பெரு நிலனும் திசைகள் எட்டும்*  அலை கடலும் குல வரையும் உண்ட கண்டன்* 
    கொம்பு அமரும் வட மரத்தின் இலைமேல்*  பள்ளி கூடினான் திருவடியே கூடகிற்பீர்*
    வம்பு அவிழும் செண்பகத்தின் வாசம் உண்டு*  மணி வண்டு வகுளத்தின் மலர்மேல் வைகும்* 
    செம்பியன் கோச் செங்கணான் சேர்ந்த கோயில்*  திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அம்பரமும் ஆகாசத்தையும்
பெரு நிலனும் பரந்த பூமியையும்
திசைகள் எட்டும் எட்டுத்திக்குகளையும்
அலை கடலும் அலையெறிகின்ற கடல்களையும்
குலம் வரையும் குலபர்வதங்களையும்

விளக்க உரை

(செம்பியன் கோச செங்கணான் சேர்ந்த கோயில்) திருவல்லிக்கேணியின் தொண்டையர் கோன், போலவும், பரமேச்சுர விண்ணகரத்தில் பல்லவன் மல்லையர்கோன் போலவும், அட்டபுயகரத்தில் வயிரமேகன் போலவும், நந்திபுரவிண்ணகரத்தில் நந்திவருமன் போலவும் இத்திருப்பதியில் செம்பியன்கோச் செங்கணான் னென்னுமோரரசன் தொண்டுபூண்டு உய்ந்து போனானென்றுணர்க. இத்திருப்பதிகத்தின் வியாக்யான அவதாரிகையில் பெரியவாச்சான் பிள்ளை – “துர்மானியுமாய் ஸ்நேஹமின்றிக்கே யிருக்கிற ராஜாதான் ஸ்ரீமார்க்கண்டேய பகவானைப்போலே தேவதாந்தர பஜநம்பண்ணி அங்குத் தன்னுடைய அபிமதம் தலைக்கட்டிக்கொள்ளப் பெறாமையாலே இங்கே பக்நாபிமாநனாய்த் திருவடிகளிலே விழுந்து ஆச்ரயித்து ஐஹிகாமுஷ்மிகங்களிரண்டையும் பெற்றப்போனான்” என்றும், “நம்பி ஒரு வாள்கொடுத்தருள அத்தைக்கொண்டு பூமியையடையத் தன காலின்கீழே இட்டுக்கொண்டானென்றொரு பிரஸித்தியுண்டாய்த்து” என்று மருளிச்செய்துள்ள ஸ்ரீஸூக்திகள் அறியத்தக்கன.

English Translation

O Devotees, if you wish to see the Lord who swallowed the sky, Earth, quarters, ocean, mountains and all else, then slept as a child on a floating fig leaf, go now to Naraiyur Manimadakkoyil, where bumble bees take the fragrance of Senbakam flowers then go and sit on Vakula flowers, and where sembianko-chenganan comes to offer worship.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்