- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
பிறை சேர் நுதலார்* பேணுதல் நம்மை இலாதமுன்*
நறை சேர் பொழில் சூழ்* நறையூர் தொழு நெஞ்சமே! என்ற*
கறை ஆர் நெடு வேல் மங்கையர்கோன்* கலிகன்றி சொல்*
மறவாது உரைப்பவர்* வானவர்க்கு இன் அரசு ஆவரே. (2)
காணொளி
பதவுரை
பிறை சேர் நுதலார் - சந்திரகலைபோன்ற நெற்றியை யுடையரான பெண்கள்
நம்மை - நம் விஷயத்தில்
பேணுதல் இலாத முன் - ஆதரவைத் தவிர்த்துக் கொள்ளும்படியான கிழத்தனம் வருவதற்கு முன்னே,
நெஞ்சமே - ‘ஓ மனமே!
நறை சேர் பொழில் சூழ் நறையூர் தொழு என்ற - தேன் நிறைந்த சோலைகள் சூழ்ந்த திருநறையூரை வணங்கு’ என்று உபதேசித்தவரும்.
விளக்க உரை
கறையார் நெடுவேல் பகவத்பாகவதவிரோதிகளை நிரஸநம் பண்ணின ரத்தக்கறை கழுவுவதற்கும் அவகாசமின்றியே வியாபரிக்குமாம் திருமங்கையாழ்வாருடைய வேல்.
English Translation
O Heart! "Before crescent-eyebrowed dames laugh, let us offer worship to the Lord-of-groves-Naraiyur", -these songs are by spear wielding Mangai king Kaliyan. Those who master it will rule the world of celestials forever.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்