விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வேறா யான் இரந்தேன்*  வெகுளாது மனக்கொள் எந்தாய்!* 
    ஆறா வெம் நரகத்து*  அடியேனை இடக் கருதி* 
    கூற ஐவர் வந்து குமைக்கக்*  குடிவிட்டவரைத்* 
    தேறாது உன் அடைந்தேன்*  திருவிண்ணகர் மேயவனே.   

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

எந்தாய் - ஸ்வாமிந்!,
யான் - அடியேன்
வேறு ஆ - விலக்ஷணமாக
இரந்தேன் - யாசிக்கின்றேன்;
வெகுளாது - சீற்றமி்ன்றி

விளக்க உரை

வேறா யானிரந்தேன் = உலகத்தில் வேண்டுகோள் இரண்டுவகைப்படும்; வேண்டினவுடனே பெறவேண்டிய நிர்ப்பந்தமின்றிக் காலக்ரமத்தில் பெறாலம்படியான பொருள்களைப் பற்றின வேண்டுகோள் ஒன்று; வேண்டினவுடனே கிடைத்தாலன்றி உயிர்தரிக்கமுடியாமல் அப்போதே பெறவவேண்டின பொருளைப்பற்றின வேண்டுகோள் மற்றொன்று. இவ் விரண்டுவகையான வேண்டுகோளில் இரண்டாவது வகையான வேண்டுகோளை இப்போது அடியேன் செய்கின்றேனென்றவாறு. ‘வேறா’ என்பதன் கருத்து இது. பஞ்சேந்திரியங்களாகிற படுகொலைக்காரர் கையில் இனி நான் ஒரு நொடிப்பொழுதும் நலிவுபடமுடியாதாதலால் இந்த க்ஷணத்திலே அடியேனை உனதருளால் வாங்கிவிடவேணுமென்று பிரார்த்திக்கின்றேனென்கை.

English Translation

O Lord residing in Tiruvinnagar! My Lord! I beg of you, please do not get angry. The senses you gave to reside in me are intent on sending me to terrible hell. I cannot trust them. I have come to your feet.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்