விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மறந்தேன் உன்னை முன்னம்*  மறந்த மதி இல் மனத்தால்* 
    இறந்தேன் எத்தனையும்*  அதனால் இடும்பைக் குழியில்*
    பிறந்தே எய்த்து ஒழிந்தேன்*  பெருமான்! திரு மார்பா!* 
    சிறந்தேன் நின் அடிக்கே*  திருவிண்ணகர் மேயவனே

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

எத்தனையும் - மிகவும் (அசித்தைக் காட்டிலும்)
இறந்தேன் - நிஹீனனாகக் கெட்டுப் போனேன்;
அதனால் - ஆகையினாலே
இடும்பை - துக்கங்களுக்கு ஆஸ்பதமான
குழியில் - கர்ப்பக் குழியில்

விளக்க உரை

முழுக்ஷீவுக்கு அர்த்த பஞ்சகஜ்ஞாநம் முக்கியமானது; எம்பெருமானை உணர்தல் தன்னையுணர்தல், உபாயத்தையணர்தல், பேற்றையுணர்தல், பேற்றின் விரோதியையுணர்தல், ஆகிய இவை அர்த்த பஞ்சகஜ்ஞாநமெனப்படும். இதில் முதலதான பரஸ்வரூபஜ்ஞாநம் தமக்கு இல்லாமையை அருளிச்செய்கிறார் மறந்தேனுன்னை முன்னம் என்று. முதல் முதலாக உன்னையன்றோ நான் மறந்தொழிந்தே னென்கிறார். முன்னம் என்பதற்கு அநாதிகாலமாக என்றும் பொருள் கொள்ளலாம். கீழ்ப்பாட்டிற்சொன்னபடி பொருளின்பங்களைஆதரித்ததுபோல ஒரு மூலையில் உன்னையும் நான் ஆதரித்திருக்கலாமே, அந்தோ! அது செய்யப் பெற்றிலேன்!, உன்னை மறந்தே போனேன். ஒரு காலும் நெஞ்சிலும் நினைக்கக் கூடாதவற்றை (அர்த்தகாமங்களை) இடைவிடாது சிந்தித்தேன்; ஒரு நொடிப் பொழுதும் மறக்க வொண்ணாத உன்னை இறைப்பொழுதும் நினையாதொழிந்தேனந்தோ!. “த்யேயோ நாராயணன்ஸ் ஸதா” என்று சாஸ்த்ரங்கள் முறையிடாநிற்க, பாவியேன் விபரீதனானேனென்கிறார்.

English Translation

O Lord residing in Tiruvinnagar! I had forgotten you then. In that forgotten mindless state, I lost all and fell into the trap of birth-death, cycles, suffering pain and miseries. My Lord, with Sri on your chest! I have come to your feet.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்