விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    சாதலும் பிறத்தலும் என்று இவற்றைக்*  காதல் செய்யாது உன கழல் அடைந்தேன்* 
    ஓதல் செய் நான்மறை ஆகி*  உம்பர் ஆதல் செய் மூவுரு ஆனவனே!* 
    ஆண்டாய்! உனைக் காண்பது ஓர்*  அருள் எனக்கு அருளுதியேல்* 
    வேண்டேன் மனைவாழ்க்கையை*  விண்ணகர் மேயவனே!       

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஓதல் செய் - பரம்பரையாக ஓதப்பட்டு வருகிற
நால் மறை ஆகி - நான்கு வேதங்களுக்கும் நிர்வாஹகனாய்
உம்பர் ஆதல் செய் மூ உரு ஆனவனே - மேன்மையுடையவராகச் செய்யப்பட்டிருக்கின்ற பிரமன் சிவனிந்திரனாகிய மூவர்க்கு நியாமகனாயிருப்பவனே!
சாதலும் பிறத்தலும் என்ற இவற்றை - சாவதும் பிறப்பதுமான ஸம்ஸாரத்தை
காதல் செய்யாது - விரும்பாமல்

விளக்க உரை

“சாமாறுங் கெடுமாறும் தமருற்றார் தலைத்தலைப்பெய்து, ஏமாறிக் கிடந்தலற்றுமிவை யென்னவுலகியற்கை” என்று ஞானிகள் வெறுக்கும்படியான இந்த ஸம்ஸார ஸ்வபாவத்தை என் சொல்வோம்!; மரண ஸமயத்திலே படும் கஷ்டங்களையும் பின்பு நரகங்களிற் படுங்கஷ்டங்களையும் மறுபடியும் கருக்குழியிலே வந்து புகுந்து படும் கஷ்டங்களையும் நினைத்து நினைத்து வெறுத்து ‘இருள் தருமா ஞாலத்து ளினிப்பிறவி யான்வேண்டேன்’ என்று இந்நிலத்திற் பிறவியைக் காறி யுமிழ்ந்து, நித்ய விபூதிப்ராபகமான உன் திருவடிகளைப் பணிந்தேன்; அருள்புரியவேணும் திருவிண்ணகர் மேயவனே! என்கிறார். ஓதல்செய் நான்மறையாகி ஏட்டில் எழுதப்படுகையின்றியே பரம்பரயா அதயயநம் பண்ணியே வருகின்ற நான்கு வேதங்களுக்கும் ப்ரவசந கர்த்தாவா யிருப்பவரென்கை.

English Translation

Life after death after life in between, not loving these I have come to your feet. Lord of the four Vedic chants and their truths you become the Lord of the three major gods! O Lord! If you grace me the grace of your holy presence, I seek to be freed of the birth in this world. Vinnagar!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்