விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பார் எழு கடல் எழு மலை எழும் ஆய்*  சீர் கெழும் இவ் உலகு ஏழும் எல்லாம்* 
    ஆர் கெழு வயிற்றினில் அடக்கி நின்று*  அங்கு ஓர் எழுத்து ஓர் உரு ஆனவனே!*
    ஆண்டாய்! உனைக் காண்பது ஓர்*  அருள் எனக்கு அருளுதியேல், 
    வேண்டேன் மனைவாழ்க்கையை*  விண்ணகர் மேயவனே.   

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பார் எழும் - ஏழு தீவுகளோடு கூடிய பூமிக்கும்
கடல் எழும் - ஸப்தஸாகரங்களுக்கும்
மலை எழும் - ஸப்தகுலாசலங்களுக்கும்
ஆய் - நிர்வாஹகனாயிருந்து கொண்டு
அங்கு - அப்படிப்பட்ட பிரளயம் வந்த காலத்து,

விளக்க உரை

எம்பெருமானுடைய அகடிதகடநா ஸாமர்த்தியத்தையே மீண்டு மருளிச்செய்கிறார். பாரெழு கடலெழு மலையெழுமாய் = “நாவலந்தீவே இறலித்தீவே, குசையின்தீவே கிரவுஞ்சத்தீவே, சான்மலித்தீவே தெங்கின் தீவே, புட்கரத்தீவே யெனத்தீவேழே, ஏழ்பெருந்தீவிற்கு மேழ்பொழிலெனப்படும்” என்ற திவாகர நிகண்டின்படி எழுவகைப்பட்ட தீவுகளையுடைத்தான பூமி என்று பொருள்படப் ‘பாரெழும்’ எனப்பட்டது. கடலெழும் = “உவரோடு கரும்பு மது நெய் தயிர் பால் புனல், மாகடலேழென வகுத்தனர் புலவர்” என்னப்பட்ட ஸப்தஸாகரங்களும். மலையெழும் = “இமயமந்தரம் கைலை வடவிந்தம், நிடதமேமகூடம் நீலகிரி யெனக், குலவரை யேழுங் கூறுமென்ப” என்னப்பட்ட ஸப்தகுலபர்வதங்களும். ஆய் என்றது இவற்றுக்கெல்லாம் எம்பெருமானே நிர்வாகனென்கை. இவற்றின் ஸ்திதியெல்லாம் எம்பெருமானுடைய ஸங்கல்பாதீகமென்றபடி.

English Translation

Bearing in your belly the seven confinents, seven mighty oceans and seven mighty hills, seven worlds of beauty and all other things, You became the alipha of sound and the shapes. O Lord! if you grace me the grace of your holy presence, I seek to be freed of the birth in this world, Vinnagar!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்