- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
பகவத்கீதையில் (14-2)1. இதம் ஜ்ஞாநமுபாச்ரித்ய மம ஸாதர்ம்ய மாகதா;, ஸர்கேபி நோபஜாயந்தே ப்ரளயே ந வ்ய்தந்தி ச” என்றாற்போலே அருளிச்செய்வன முன்னடிகள். நெஞ்சமே! எம்பெருமானுடைய ஆஜ்ஞையாகிய வேதம் முதலிய சாஸ்த்ரங்களைச் சிறமேற்கொண்டு அவற்றின்படியே நடக்குமவர்கள் ஒருகாலும் கெடுதலடைமாட்டார்கள்; ஊழிப்பெரு வெள்ளத்திலும் (மார்க்கண்டேயனைப்போலே) அழியாதிருப்பவர்கள் என்பது உனக்குத் தெரியுமாயின் நீயும் இவர்களைப்போலேயாக விரும்பி நந்திபுரவிண்ணகரத்தை நண்ணுவாயாக என்கிறார். பிரளயகாலத்தில் கடல்கிளர்ந்து மேலே அண்டபித்தியளவுஞ் சென்று நூக்கினாலும் அழியமாட்டார்களென்றது – பிறப்பதும் இறப்பதுமாகிற விகாரங்களுக்கு ஆளாகாமல்ழூ பல்லாண்டும் பரமாத்மனைச் சூழ்ந்திருந்து பல்லாண்டேத்தப் பெறுவர் என்றவாறு.
English Translation
When the flood of deluge waters rise and touch the sky, those who carry the Lord's will on their heads will come to no harm, know this O Heart, Our Lord resides amid waters that spil gems which make day out of night, by their radiance. Bow to the Lord of the Nagar-Nandipura Vinnagaram, our destination.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்