விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    உய்யும் வகை உண்டு சொன செய்யில் உலகு ஏழும்*  ஒழியாமை முன நாள்* 
    மெய்யின் அளவே அமுதுசெய்ய வல*  ஐயன்அவன் மேவும் நகர்தான்*
    மைய வரி வண்டு மது உண்டு கிளையோடு*  மலர் கிண்டி அதன்மேல்* 
    நைவளம் நவிற்று பொழில்*  நந்திபுரவிண்ணகரம்நண்ணு மனமே.     

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

முன நாள் - முன்பொருகால்
உலகு ஏழும் ஒழியாமை - ஸப்த லோகங்களில் ஒன்றுந் தவறாதபடி
மெய்யின் அளவே - (அவ்வுலகமெல்லாம் தனது சிறிய) திருமேனியளவாக (ஒடுங்கும்படி)
அமுத செய்ய வல - அமுது செய்வதில் ஸமர்த்தனாயிருந்த
ஐயன் அவன் தான் - அப்பெருமான்

விளக்க உரை

சொன – ‘சொன்ன’ என்பதன் தொகுத்தல்; பலவின்பால் வினையாலணையும் பெயர் : சொன்னவற்றை என்றபடி. மெய்யினளவே யமுதுசெய்கையாவது - இத்தனைபெரிய உலகமெல்லாம் அத்தனை சிறிய திருமேனியிலே ஒடுங்கும்படி அமுது செய்கை. வல – வல்ல நைவளம் – ஓர்பண்.

English Translation

He took the seven worlds seven oceans and the seven mountains in his great belly. He then remade the world, from out of all these in age after age through the great deluge. He resides in the groves where the hum of bees and fragrance of flowers do mingle in one. Bow to the Lord of the Nagar-Nandipura Vinnagaram our destination.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்