- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
வளர்ந்தவனைத் தடங் கடலுள்* வலி உருவில் திரி சகடம்*
தளர்ந்து உதிர உதைத்தவனை* தரியாது அன்று இரணியனைப்-
பிளந்தவனை* பெரு நிலம் ஈர் அடி நீட்டிப்* பண்டு ஒருநாள்
அளந்தவனை* யான் கண்டது* அணி நீர்த் தென் அரங்கத்தே.
காணொளி
பதவுரை
தளர்ந்து உதிர உதைத்தவனை - கட்டுக்குலைந்து சிந்நாபிந்நமாகும்படி (அதனைத்) திருவடியால் உதைத்தவனும்
அன்று தரியாது இரணியனை பிளந்தவனை - ஒருகாலத்தில் பொறுத்திருக்கமாட்டாமல் இரண்யாசுரனைக் கிழித்துப்போட்டவனும்,
பண்டு ஒருகால் - மற்றுமொருகாலத்தில்
ஈர் அடி நீட்டி - இரண்டு திருவடிகளைப் பரப்பிவைத்து
பெருநிலம் அளந்தவனை - விசாலமான பூமியை யெல்லாம் அளந்து கொண்டவனுமான பெருமானை
விளக்க உரை
இரண்டாமடியில் ‘உதிர’ என்றும் ‘அதிர’ என்றும் பாடபேதமுண்டு; அதிர – அதிர்ச்சியுண்டாம்படி. தரியாது – தன்விஷயத்திலே எத்தனை தீங்குசெய்தாலும் தரித்திருப்பன் எம்பெருமான்; தனது உயிர்நிலையான அடியவர் திறத்தில் தீங்கு செய்தால் ஒருநொடிப்பொழுதும் தரித்திருக்கமாட்டானென்க.
English Translation
The Lord who reclines in the ocean, the Lord who smote a bedevilled cart to smithers, the one who tore Hiranya's chest, the one who came as a manikin, then grew and took the Earth, -I have seen him in Southern Arangam amid cool waters.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்