- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
வண்ணப் பவளம் மருங்கினிற் சாத்தி* மலர்ப்பாதக் கிண்கிணி ஆர்ப்ப*
நண்ணித் தொழும் அவர் சிந்தை பிரியாத* நாராயணா! இங்கே வாராய்*
எண்ணற்கு அரிய பிரானே* திரியை எரியாமே காதுக்கு இடுவன்*
கண்ணுக்கு நன்றும் அழகும் உடைய* கனகக் கடிப்பும் இவையாம்!
காணொளி
பதவுரை
நண்ணி தொழுமவர் - கிட்டி வணங்குகின்றவர்களுடைய;
சிந்தை - மநஸ்ஸில் நின்றும்;
பிரியாத - விட்டு நீங்காத;
பவளம் - பவழவடத்தை;
மருங்கினில் - திருவரையிலே;
விளக்க உரை
கீழ்ப்பாசுரத்தில் காதுகுத்த அழைத்தாள்; காதில் நூல்திரியை இட அழைக்கிறாள் - இப்பாட்டில். காதுகுத்தி நூல்திரியை இட்டுக் காது பெருக்கியபின்பு காதணிகளையிடுதல் இயல்பு. அழகும் = உம் - இசைநிறை. “கனகக்கடிப்புமிவையாம்” என்றும் பாடம் கொள்ளலாமென்பர். கடிப்பு - கர்ணபூஷணம்.
English Translation
O Narayana! Forever you remain in the thoughts of those who worship you! Wearing a colorful coral band on your waist, and jingling ankle bells on your lotus feet, comes hither. O Lord of beauty beyon
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்