- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
ஆழ்வார் கீழ்த்திருமொழியில் பட்ட வ்யதைமெல்லாத் தீர்ந்து மகிழ்ந்து பேசுந்திருமொழியாயிற்று இது என்னாதனைத் திருவரங்கத்தில் காணப்பெற்றேன் என்கிறார். கைம்மான மழகளிற்றை = ஓர் ஆனை கைகளையும் கால்களையும் பரப்பிக்கொண்டு கிடப்பதுபோலப் பள்ளிகொண்டிருக்கும் அழகில் ஈடுபட்டுச் சொல்லுகிறபடி. நீண்ட துதிக்கையை யுடையதாய்ப் பருவத்தாலே இளையதாயிருப்பதொரு ஆனை சாய்ந்தாற்போலே யிருக்கின்றவனையென்கை. “களிறுபோன்றவனை” என்னாது களிற்றை என்றது ஐக்கியமாகச் சொன்னது உவமையாகுபெயர். கடல்கிடந்த கருமணியை – ஒரு நீலரத்னம் சாய்ந்தாற்போலே திருப்பாற்கடலிலே கிடந்தவனை என்கை. மைம்மான மரதகத்தை – பசுமை, நீலம், கருமை என்ற நிறங்களை அபேதமாகக் கூறுவது கவி மரபாதலால் எம்பெருமானுடைய காளமேகத் திருவுருவத்திற்குக் கருமணியையும் மரதகத்தையும் உவமை கூறினர். மறையுரைத்த என்பதற்கு – ‘வேதங்களை உபதேசித்தருளின’ என்றும் வேதங்களால் பிரதிபாதிக்கப்பட்ட’ என்றும் இரண்டுவகையாகப் பொருள் ஆகும். பிந்தினபொருள் பாங்கு
English Translation
The elephant cub, that black gem who reclines in the ocean, the dark emerald, the Vedic Lord, my master, my always-sweet-to-me-Lord, the Lord who stopped a hailstorm, -I have seen him in Southern Arangam amid cool waters.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்