- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
அண்டர் ஆனவர் வானவர்கோனுக்கு என்று* அமைத்த சோறு அது எல்லாம் உண்டு*
கோநிரை மேய்த்து அவை காத்தவன்* உகந்து இனிது உறை கோயில்*
கொண்டல் ஆர் முழவின் குளிர் வார் பொழில்* குல மயில் நடம் ஆட*
வண்டு தான் இசை பாடிடும் நாங்கூர்* வண்புருடோத்தமமே.
காணொளி
பதவுரை
குளிர் வார் பொழில் - குளிர்ந்து பரந்த சோலைகளிலே,
கொண்டல் ஆர் முழவில் - மேகங்களினுடைய மிக்க கோஷம்உண்டாகும் போது
குலம் மயில் நடம் ஆட - கூட்டங் கூட்டமான மயில்கள் கூத்தாடப் பெற்றதும்,
வண்டு இசைபாடிடு - வண்டுகள் (மயில்களின் கூத்தாட்டத்திற்குத் தகுதியாக) இசைபாடப் பெற்றதுமான
நாங்கூர் - திருநாங்கூரில்
விளக்க உரை
English Translation
The Lord who gulped all the food-offering, --that the cowherd-folk had made for Indra, -- then lifted a mount to protect the cows, resides at Nangur, --amid groves resounding with the bees sing and the peacocks dance, --in the temple of Van-Purushottamam.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்