- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
கம்பமா கடலடைத்து இலங்கைக்குமன்* கதிர்முடிஅவைபத்தும் அம்பினால் அறுத்து*
அரசு அவன் தம்பிக்கு* அளித்தவன் உறைகோயில்*
செம்பலாநிரை செண்பகம்மாதவி* சூதகம் வாழைகள்சூழ்*
வம்புஉலாம் கமுகுஓங்கிய நாங்கூர* வண்புருடோத்தமமே.
காணொளி
பதவுரை
கம்பம் மா கடல் அடைத்து - (கண்டபோதே) நடுக்கத்தை விளைப்பதான பெரிய கடலிலே ஸேதுகட்டி
இலங்கைக்கு மன் கதிர் முடி அவை பத்தும் - இலங்கைக்கு அதிபதியான இராவணனுடைய ஒளிவிடுகின்ற தலைகள் பத்தையும்
அம்பினால் அறுத்து - பாணங்களினால் அறுத்து
அவன் தம்பிக்கு அரசு அளித்தவன் - அவ்விராவணன் தம்பியான விபீஷணாழ்வானுக்கு இராஜ்யமளித்த இராமபிரான்
உறை கோயில் - எழுந்தருளியிருக்குமிடம் எதுவென்றால்,
விளக்க உரை
English Translation
The Lord who made a bridge over the sea and entered Lanka, felled the ten crowned heads of the Rakshasa king, then gave the kingdom to his younger brother, resides at Nangur, --surrounded by groves with red Jackfruit, Mango, Plantain, Areca and Senbakam, Madavi, whose fragrances mix and float in the air, --in the temple of Van-Purushottamam.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்