- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
நந்தா விளக்கே! ஒரு நாளும் அணையாத விளக்கே! என்கை; (நந்துதல்-அழிதல்) ஒளியினாலே விளங்கும் பொருள் விளக்கு எனப்படும்; அதுபோல எம்பெருமான் நித்யமாய் ஸ்வயம்ப்ரகாசமான ஜ்ஞாநத்தைக் குணமாகவுடையனாயும் அப்படிப்பட்டஞானமே ஸ்வரூபமாகவுள்ள வனுயுமிருப்பது பற்றி நந்தாவிளக்கு எனப்பட்டான். அளத்தற்கு அரியாய் - அளவிட முடியாதவனே! என்கை. உலகத்திலுள்ள பொருள்களை மூன்றுவகைகளாலே அளவிடுதலுண்டு; அதாவது-காலத்தைக் கொண்டும், சேதத்தைக் கொண்டும், வஸ்துவைக் கொண்டும் அளவிடுதல்; இஃது எம்பெருமானிடத்தில் செய்யவொண்ணாது; எம்பெருமான் ஸர்வகாலத்திலு முள்ளவனாதலால் காலபரிச் சேதமில்லாதவன். ஸர்வ வ்யாபியாயிருப்பதால் தேச பரிச் சேதமில்லாதவன். அவனோடொத்த வஸ்த இல்லாமையினால் வஸ்து பரிச்சேதமில்லாதவன். இதுவே திரவியவரிவெஉராஹிதவம்; (த்ரிவித பரிச்சேதராஹித்யம்) என்று ஸ்ரீபாஷ்யாதிகளிற் கூறப்படும். இதுபற்றியே எம்பெருமானுக்கு அநந்தன் என்று திருநாமமாயிற்று.
English Translation
Celestials stand and call, “O Nanda-Villaku, lamp-eternal, hard-to-fathom, Namo-Narayana, dark cloud-hued Lord, grace-us!” He resided in Nangur where the bees fill the eight Quarters with their Devagandhari Raga while the bumble-bees follow their songs with shadow accompaniment. The Mandara trees spread fragrance everywhere. Offer worship in Manimodakkoyil, O Heart!
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்