- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
(பிச்சச்சிறுட்லி) முன் ஒன்றரையடியால் ஜைநர்களின் நடவடிக்கையைப் பழித்துக் கூறுகின்றார். ஜீவஹிம்ஸை செய்யக் கூடாதென்கிற நூற்கொள்கையிலே ஜைநர்கள் மிகவும் ஊற்றமுடையராயிருப்பர், தரையில் நடக்கும்போது பூச்சிகளும் புழுக்களும் காலில்மதிபட்டு முடிந்து போகுமென்று ஜீவ ஹிம்ஸைக்கு வெருவி மயிலிறகுகளை விளக்குமாறாகக்கட்டிக் கையிலேகொண்டு தரையை விளக்கிக்கொண்டே நடந்து செல்லுவார்கள், இதனைச் சொல்லுகிறது “பிச்சச்சிறுபீலி பிடித்து“ என்று. திகம்பரச்சாமிகளாய்த் திரிவது முண்டாகையால் அதனைச் சொல்லுகிறது “பிணந்தின் மடவாரவர்போல் அச்சமிலர் நாணிலர்“ என்று. பிணங்களைப் பிடுங்கித் தின்கிற பிசாசுகள் வெட்கமும் அச்சமுமின்றியே துணியில்லாமல் திரிவதுபோலத் திரிகின்றனராம் ஜைநர்கள். இதுபற்றியே ‘ஜைநப்பிசாசுகள்‘ என்ற வ்யவஹாரம் உலகிற் பெரும்பாலும் வழங்குகின்றதென்பர். இப்படி அநாவச்யகமாயும் அநுசிதமாயுமுள்ள நடத்தைகளையுடைய ஜைநர்களின் செய்கையிலே ஜுகுப்ஸைகொண்டு அந்தரங்க பக்தியுடனே தன்னை வந்து பணிகின்ற பக்தர்கட்கு அருள்செய்யும் பெருமானுறையுமிடம் திருநீர் மலை – என்றதாயிற்று. நித்யம் என்ற வடசொல் நீச்சயமெனத்திரிந்தது. “நமக்கு நிச்சம் அருள் செய்“ என்றும், “நிச்சம் உள்குழைந்து நினார்க்கு“ என்றும், “நிச்சம் அருள் செய்யுமவற்கு“ என்றும் மூன்றுவிதமாக அந்வயிக்கலாம்.
English Translation
There are those roam the Earth without shame for fear, like the peacock-feather-whisking corpse-eating gorgons. Despising their ways those who strew flowers with love, and seek protection from Yama’s agents, with melting heart, find the Lord’s grace in plenty. Tirunirmalai is the Lord’s great hill abode.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்