- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்

பாசுரம்
இடும்பையால் அடர்ப்புண்டு இடுமினோ துற்று என்று* இரந்தவர்க்கு இல்லையே என்று*
நெடுஞ் சொலால் மறுத்த நீசனேன் அந்தோ!* நினைக்கிலேன் வினைப் பயன் தன்னை*
கடுஞ் சொலார் கடியார் காலனார் தமரால்* படுவது ஓர் கொடு மிறைக்கு அஞ்சி*
நடுங்கி நான் வந்து உன் திருவடி அடைந்தேன்* நைமிசாரணியத்துள் எந்தாய்!
காணொளி
பதவுரை
இடும்பையால் அடர்ப்புண்டு - ஏழ்மைத்தனத்தினால் கஷ்டப்பட்டு
ஓ! துற்று இடுமின் என்று - “ஐயோ! ஒரு கவளம் இடுங்கோள்” என்று கதறி
இரந்தவர்க்கு - பிச்சை கேட்டவர்களுக்கு
இல்லையே என்று - இல்லவேயில்லை யென்று சொல்லி
நெடு சொலால் மறுத்த - நீண்ட சொல்லாலே திரஸ்கரித்த
விளக்க உரை
English Translation
Those who when starving, seeking a morsel, came to me, but I gave them nothing. Hard-hearted cold one, lowly this self O, -- thoughtless of the fruit of my action. Hot-spoken Time-Lord, cruel and nasty, ---fearing his terrible tortures, Trembling and panting. I have come to; your feet Naimisaraniyam-living Lord, O!
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்