2 எண்ணிக்கை பாடல் பாட

மன்னிய பல்பொறிசேர் ஆயிரவாய் வாளரவின்,*
சென்னி மணிக்குடுமித் தெய்வச் சுடர்நடுவுள்,*
மன்னிய நாகத்தணை மேல் ஓர் மாமலைபோல்,*
மின்னும்மணி மகர குண்டலங்கள் வில்வீச,*
துன்னிய தாரகையின் பேரொளிசேர் ஆகாசம்,*
என்னும் விதானத்தின் கீழால்,* (2)  -இருசுடரை-

அன்னம் துயிலும் அணிநீர் வயல்ஆலி,*
என்னுடைய இன்அமுதை எவ்வுள் பெருமலையை,* (2)
கன்னி மதிள்சூழ் கணமங்கைக் கற்பகத்தை,*
மின்னை இருசுடரை வெள்ளறையுள் கல்லறைமேல்-
பொன்னை மரகதத்தை புட்குழி எம் போர்ஏற்றை,*
மன்னும் அரங்கத்து எம் மாமணியை,* (2) -வல்லவாழ்ப்- 

தன்வயிறுஆர விழுங்க,* கொழுங்கயல்கண்-
மன்னு மடவோர்கள் பற்றிஓர் வான்கயிற்றால்*
பின்னும் உரலோடு கட்டுண்ட பெற்றிமையும்,*
அன்னதுஓர் பூதமாய் ஆயர் விழவின்கண்*
துன்னு சகடத்தால் புக்க பெருஞ்சோற்றை,*
முன்இருந்து முற்றதான் துற்றிய தெற்றெனவும்*
மன்னர் பெருஞ்சவையுள் வாழ்வேந்தர் தூதனாய்த்,*
தன்னை இகழ்ந்துஉரைப்ப தான்முனநாள் சென்றதுவும்,*
மன்னு பறைகறங்க மங்கையர்தம் கண்களிப்ப,*
கொல்நவிலும் கூத்தனாய் பேர்த்தும் குடம்ஆடி,*
என்இவன் என்னப்படுகின்ற ஈடறவும்,*
தென்இலங்கை ஆட்டி அரக்கர் குலப்பாவை,*
மன்னன் இராவணன்தன் நல்தங்கை,*  -வாள்எயிற்றுத்-

துன்னு சுடுசினத்துச் சூர்ப்பணகா சோர்வுஎய்தி,*
பொன்நிறம் கொண்டு புலர்ந்துஎழுந்த காமத்தால்,*
தன்னை நயந்தாளைத் தான்முனிந்து மூக்கு அரிந்து,*
மன்னிய திண்ணெனவும் வாய்ந்த மலைபோலும்,*
தன்னிகர் ஒன்றுஇல்லாத தாடகையை* (2 ) மாமுனிக்கா-