2 எண்ணிக்கை பாடல் பாட

இருளிரியச் சுடர்மணிகள் இமைக்கும் நெற்றி*  இனத்துத்தி ணிபணம் ஆயிரங்களார்ந்த*  அரவரசப்
பெருஞ்சோதி  அனந்தன் என்னும்*  அணிவிளங்கும் உயர்வெள்ளை ணையை மேவி*
திருவரங்கப் பெருநகருள் தெண்ணீர்ப் பொன்னி*  திரைக்கையால் அடிவருடப் பள்ளி கொள்ளும்* 
கருமணியைக் கோமளத்தைக் கண்டு கொண்டு*  என் கண்ணிணைகள் என்றுகொலோ களிக்கும் நாளே (2)

வன் பெரு வானகம் உய்ய அமரர் உய்ய மண் உய்ய*  மண்-உலகில் மனிசர் உய்ய*
துன்பம் மிகு துயர் அகல அயர்வு ஒன்று இல்லாச் சுகம் வளர*  அகம் மகிழும் தொண்டர் வாழ *
அன்பொடு தென்திசை நோக்கிப் பள்ளிகொள்ளும்*  அணி-அரங்கன் திருமுற்றத்து அடியார் தங்கள்*
இன்ப மிகு பெருங் குழுவு கண்டு*   யானும் இசைந்து உடனே என்றுகொலோ இருக்கும் நாளே (2)

திடர் விளங்கு கரைப் பொன்னி நடுவுபாட்டுத்*  திருவரங்கத்து அரவணையிற் பள்ளிகொள்ளும்* 
கடல் விளங்கு கருமேனி அம்மான்தன்னைக்*  கண்ணாரக் கண்டு உகக்கும் காதல்தன்னால்*
குடை விளங்கு விறல்-தானைக் கொற்ற ஒள் வாள்*  கூடலர்கோன் கொடைக் குலசேகரன் சொற் செய்த* 
நடை விளங்கு தமிழ்-மாலை பத்தும் வல்லார்*  நலந்திகழ் நாரணன்-அடிக்கீழ் நண்ணுவாரே  (2)

தேட்டு அருந் திறல்-தேனினைத்*  தென் அரங்கனைத்*  திருமாது வாழ் 
வாட்டம் இல் வனமாலை மார்வனை வாழ்த்தி*  மால் கொள் சிந்தையராய்*
ஆட்டம் மேவி அலந்து அழைத்து*  அயர்வு-எய்தும் மெய்யடியார்கள்தம்* 
ஈட்டம் கண்டிடக் கூடுமேல்*  அது காணும் கண் பயன் ஆவதே  (2)

அல்லி மா மலர்-மங்கை நாதன்*  அரங்கன் மெய்யடியார்கள் தம்* 
எல்லை இல் அடிமைத் திறத்தினில்*  என்றும் மேவு மனத்தனாம்* 
கொல்லி-காவலன் கூடல்-நாயகன்*  கோழிக்கோன் குலசேகரன்*
சொல்லின் இன்தமிழ் மாலை வல்லவர்*  தொண்டர் தொண்டர்கள் ஆவரே (2)

மெய் இல் வாழ்க்கையை*  மெய் எனக் கொள்ளும்*  இவ்
வையம்தன்னொடும்*  கூடுவது இல்லை யான்*
ஐயனே*  அரங்கா என்று அழைக்கின்றேன்*
மையல் கொண்டொழிந்தேன்*  என்தன் மாலுக்கே (2)

அங்கை-ஆழி*  அரங்கன் அடியிணை*
தங்கு சிந்தைத்*  தனிப் பெரும் பித்தனாய்க்*
கொங்கர்கோன்*  குலசேகரன் சொன்ன சொல்*
இங்கு வல்லவர்க்கு*  ஏதம் ஒன்று இல்லையே (2)

ஊன் ஏறு செல்வத்து*  உடற்பிறவி யான் வேண்டேன்*
ஆனேறு ஏழ் வென்றான்*  அடிமைத் திறம் அல்லால்*
கூன் ஏறு சங்கம் இடத்தான்*  தன் வேங்கடத்துக்*
கோனேரி வாழும்*  குருகாய்ப் பிறப்பேனே (2)

ஆனாத செல்வத்து*  அரம்பையர்கள் தற் சூழ*
வான் ஆளும் செல்வமும்*  மண்-அரசும் யான் வேண்டேன்*
தேன் ஆர் பூஞ்சோலைத்*  திருவேங்கடச் சுனையில்*
மீனாய்ப் பிறக்கும்*  விதி உடையேன் ஆவேனே

செடியாய வல்வினைகள் தீர்க்கும்*  திருமாலே*
நெடியானே வேங்கடவா*  நின் கோயிலின் வாசல்*
அடியாரும் வானவரும்*  அரம்பையரும் கிடந்து இயங்கும்*
படியாய்க் கிடந்து*  உன் பவளவாய் காண்பேனே (2)

மன்னிய தண் சாரல்*  வட வேங்கடத்தான்தன்*
பொன் இயலும் சேவடிகள்*  காண்பான் புரிந்து இறைஞ்சிக்*
கொல் நவிலும் கூர்வேற்*  குலசேகரன் சொன்ன*
பன்னிய நூற் தமிழ்-வல்லார்*  பாங்காய பத்தர்களே (2)

தரு துயரம் தடாயேல்*  உன் சரண் அல்லால் சரண் இல்லை* 
விரை குழுவும் மலர்ப் பொழில் சூழ்*  வித்துவக்கோட்டு அம்மானே*
அரி சினத்தால் ஈன்ற தாய்*  அகற்றிடினும்*  மற்று அவள்தன் 
அருள் நினைந்தே அழும் குழவி*  அதுவே போன்று இருந்தேனே (2)    

வித்துவக்கோட்டு அம்மா*  நீ வேண்டாயே ஆயிடினும்* 
மற்று ஆரும் பற்று இலேன் என்று*  அவனைத் தாள் நயந்து*
கொற்ற வேல்-தானைக்*  குலசேகரன் சொன்ன* 
நற்றமிழ் பத்தும் வல்லார்*  நண்ணார் நரகமே (2)

ஏர் மலர்ப் பூங்குழல் ஆயர் மாதர்*  எனைப் பலர் உள்ள இவ் ஊரில்*  உன்தன்
மார்வு தழுவுதற்கு*  ஆசையின்மை அறிந்தறிந்தே உன்தன் பொய்யைக் கேட்டு*
கூர் மழை போல் பனிக் கூதல் எய்திக்*  கூசி நடுங்கி யமுனை யாற்றில்* 
வார் மணற் குன்றிற் புலர நின்றேன்*  வாசுதேவா உன் வரவு பார்த்தே (2)

அல்லி மலர்த் திருமங்கை கேள்வன் தன்னை நயந்து*  இள ஆய்ச்சிமார்கள்* 
எல்லிப் பொழுதினில் ஏமத்து ஊடி*  எள்கி உரைத்த உரையதனைக்*
கொல்லி நகர்க்கு இறை கூடற்கோமான்*  குலசேகரன் இன்னிசையில் மேவிச்* 
சொல்லிய இன் தமிழ் மாலை பத்தும்*  சொல்ல வல்லார்க்கு இல்லை துன்பந் தானே. (2)

ஆலை நீள் கரும்பு அன்னவன் தாலோ*  அம்புயத் தடங் கண்ணினன் தாலோ* 
வேலை நீர் நிறத்து அன்னவன் தாலோ*  வேழப் போதகம் அன்னவன் தாலோ* 
ஏல வார் குழல் என்மகன் தாலோ*  என்று என்று உன்னை என் வாயிடை நிறையத்* 
தால் ஒலித்திடும் திருவினை இல்லாத்*  தாயரிற் கடை ஆயின தாயே (2)  

மல்லை மா நகர்க்கு இறையவன்தன்னை*  வான் செலுத்தி வந்து ஈங்கு அணை மாயத்து*
எல்லையில் பிள்ளை செய்வன காணாத்*  தெய்வத் தேவகி புலம்பிய புலம்பல்* 
கொல்லி காவலன் மால் அடி முடிமேல்*  கோலமாம் குலசேகரன் சொன்ன 
நல்லிசைத் தமிழ் மாலை வல்லார்கள்*  நண்ணுவார் ஒல்லை நாரணன் உலகே (2)   

மன்னு புகழ்க் கௌசலைதன்*  மணிவயிறு வாய்த்தவனே* 
தென் இலங்கைக் கோன் முடிகள்*  சிந்துவித்தாய் செம்பொன் சேர்* 
கன்னி நன் மா மதில் புடைசூழ்*  கணபுரத்து என் கருமணியே* 
என்னுடைய இன்னமுதே*  இராகவனே தாலேலோ (2)      

தேவரையும் அசுரரையும்*  திசைகளையும் படைத்தவனே* 
யாவரும் வந்து அடி வணங்க*  அரங்கநகர்த் துயின்றவனே* 
காவிரி நல் நதி பாயும்*  கணபுரத்து என் கருமணியே* 
ஏ வரி வெஞ்சிலை வலவா*  இராகவனே தாலேலோ (2)

கன்னி நன் மா மதில் புடைசூழ்*  கணபுரத்து என் காகுத்தன்-
தன் அடிமேல்*  தாலேலோ என்று உரைத்த*  தமிழ்மாலை* 
கொல் நவிலும் வேல் வலவன்*  குடைக் குலசேகரன் சொன்ன* 
பன்னிய நூல் பத்தும் வல்லார்*  பாங்காய பத்தர்களே (2)

வன் தாளின் இணை வணங்கி வளநகரம் தொழுது ஏத்த*  மன்னன் ஆவான்-
நின்றாயை*  அரியணை மேல் இருந்தாயை*  நெடுங் கானம் படரப் போகு- 

என்றாள் எம் இராமாவோ*  உனைப் பயந்த*  கைகேசி தன் சொற் கேட்டு* 
நன்றாக நானிலத்தை ஆள்வித்தேன்* நன்மகனே உன்னை நானே* (2)


ஏர் ஆர்ந்த கரு நெடுமால் இராமனாய்*  வனம் புக்க அதனுக்கு ஆற்றாத்* 
தார் ஆர்ந்த தடவரைத் தோள் தயரதன் தான் புலம்பிய* அப் புலம்பல்தன்னை* 
கூர் ஆர்ந்த வேல் வலவன்*  கோழியர்கோன் குடைக் குல சேகரன் சொற் செய்த* 
சீர் ஆர்ந்த தமிழ்மாலை இவை வல்லார்*  தீ நெறிக்கண் செல்லார் தாமே (2)

அங்கண் நெடு மதில் புடை சூழ் அயோத்தி என்னும்*  அணி நகரத்து உலகு அனைத்தும் விளக்கும் சோதி* 
வெங் கதிரோன் குலத்துக்கு ஓர் விளக்காய்த் தோன்றி*  விண் முழுதும் உயக் கொண்ட வீரன்தன்னைச்* 

செங்கண் நெடுங் கரு முகிலை இராமன்தன்னைத்*   தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள்* 
எங்கள் தனி முதல்வனை எம்பெருமான்தன்னை*  என்று கொலோ கண் குளிரக் காணும் நாளே (2)       


அன்று சராசரங்களை வைகுந்தத்து ஏற்றி*  அடல் அரவப் பகையேறி அசுரர்தம்மை*
வென்று இலங்கு மணி நெடுந்தோள் நான்கும் தோன்ற*  விண் முழுதும் எதிர்வரத் தன் தாமம் மேவி* 
சென்று இனிது வீற்றிருந்த அம்மான்தன்னைத்*  தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள்* 
என்றும் நின்றான் அவன் இவனென்று ஏத்தி நாளும்*  இறைஞ்சுமினோ எப்பொழுதும் தொண்டீர் நீரே*  

தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள்*  திறல் விளங்கு மாருதியோடு அமர்ந்தான் தன்னை* 
எல்லை இல் சீர்த் தயரதன்தன் மகனாய்த் தோன்றிற்று*  அது முதலாத் தன் உலகம் புக்கது ஈறா* 
 
கொல் இயலும் படைத் தானைக் கொற்ற ஒள்வாள்*  கோழியர்கோன் குடைக் குலசேகரன் சொற் செய்த* 
நல் இயல் இன் தமிழ்மாலை பத்தும் வல்லார்*  நலந் திகழ் நாரணன் அடிக்கீழ் நண்ணுவாரே*