2 எண்ணிக்கை பாடல் பாட
பொய் நின்ற ஞானமும்* பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும்,*
இந் நின்ற நீர்மை* இனி யாம் உறாமை,* உயிர் அளிப்பான்-
எந் நின்ற யோனியுமாய்ப் பிறந்தாய் இமையோர் தலைவா!*
மெய்ந் நின்று கேட்டருளாய்,* அடியேன் செய்யும் விண்ணப்பமே.(2)
முலையோ முழு முற்றும் போந்தில,* மொய் பூங் குழல் குறிய-
கலையோ அரை இல்லை நாவோ குழறும்,* கடல் மண் எல்லாம்-
விலையோ என மிளிரும் கண் இவள் பரமே!* பெருமான்-
மலையோ* திருவேங்கடம் என்று கற்கின்ற வாசகமே? (2)
யாதானும் ஓர் ஆக்கையில் புக்கு,* அங்கு ஆப்புண்டும் ஆப்பு அவிழ்ந்தும்*
மூது ஆவியில் தடுமாறும்* உயிர் முன்னமே,* அதனால்-
யாதானும் பற்றி நீங்கும் விரதத்தை நல் வீடுசெய்யும்*
மாதாவினை பிதுவை,* திருமாலை வணங்குவனே. (2)