மேம்பொருள் போக விட்டு* மெய்ம்மையை மிகவு ணர்ந்து,*
ஆம்பரி சறிந்து கொண்டு* ஐம்புல னகத்த டக்கி,*
காம்பறத் தலைசி ரைத்துன்* கடைத்தலை யிருந்துவாழும்*
சோம்பரை உகத்தி போலும்* சூழ்புனல் அரங்கத் தானே!
பெண்ணுலாம் சடையி னானும்* பிரமனு முன்னைக் காண்பான்,*
எண்ணிலா வூழி யூழி* தவஞ்செய்தார் வெள்கி நிற்ப,*
விண்ணுளார் வியப்ப வந்து* ஆனைக்கன் றருளை யீந்த-
கண்ணறா,* உன்னை யென்னோ* களைகணாக் கருது மாறே!(2)
துவளத்தொண் டாய தொல்சீர்த்* தொண்டர டிப்பொ டிசொல்,*
இளையபுன் கவிதை யேலும்* எம்பிறார் கினிய வாறே!(2)