விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    இல் பிறப்பு அறியீர் இவர் அவர் என்னீர்*  இன்னது ஓர் தன்மை என்று உணரீர்* 
    கற்பகம் புலவர் களைகண் என்று உலகில்*  கண்டவா தொண்டரைப் பாடும்* 
    சொல் பொருள் ஆளீர் சொல்லுகேன் வம்மின்*  சூழ் புனல் குடந்தையே தொழுமின்* 
    நல் பொருள் காண்மின் பாடி நீர் உய்மின்*  நாராயணா என்னும் நாமம். 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கற்பகம் என்று - கல்பவ்ருக்ஷம்போல் ஸர்வஸ்வதானம் செய்பவரென்றும்
புலவர் என்று - ஸர்வஜ்ஞரென்றும்
களைகண் என்று - ரக்ஷகர் என்றும் (ஆகவிப்படி)
கண்ட ஆ பாடும் - மனம் போனபடி (சிறப்பித்துக்கூறிக்)கவிபாடுகின்ற
சொல்பொருள் ஆனீர் - சொல்லும் பொருளும் நன்கறிந்த மஹாகவிகளே!

விளக்க உரை

English Translation

You don’t know their names, or where they hail from, or what their temperament is like. “O Kalpaka tree!”, “O Friend-of-poets!” –you go and praise them in song thus. O, Bardic singers, come here I tell you, worship the Lord in Kudandai. Know thy good fortune, sing and be joyous, Narayana is the good name.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்