விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கதிரவன் குணதிசைச் சிகரம் வந்துஅணைந்தான்*  கனைஇருள் அகன்றது காலைய‌ம் பொழுதாய்,* 
    மதுவிரிந்து ஒழுகின மாமலர் எல்லாம்*  வானவர் அரசர்கள் வந்து வந்துஈண்டி,*
    எதிர்திசை நிறைந்தனர் இவரொடும் புகுந்த*  இருங்களிற்று ஈட்டமும் பிடியொடு முரசும்,* 
    அதிர்தலில் அலைகடல் போன்றுளது எங்கும்*  அரங்கத்து அம்மா! பள்ளி எழுந்து அருளாயே.  (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கதிரவன் - ஸூர்யனானவன்
குணதிசை - கிழக்குத் திக்கிலே
சிகரம் - உதயகிரியின்) கொடு முடியிலே
வந்து அணைந்தான் - வந்துகூடினான்;
கன இருள் - (இரவில்) அடர்ந்திருந்த இருளானது

விளக்க உரை

உரை:1

திருவரங்கத்தில் பள்ளிகொண்டு இருக்கும் பெருமானே, கிழக்கு திசையிலே சூரியன் உதிக்க, இருளானதுநீங்கியது. அழகிய காலைப் பொழுது வந்தவுடன், மலர்கள் எல்லாம் விகாசம் அடைந்து தேன் நிறைந்து காணப்பட்டன. தேவர்களும்அரசர்களும்தெற்குபக்கத்திலேதிரண்டனர். அவர்களோடு வந்த யானை கூட்டங்களும், பெரிய வாத்தியங்களும்சப்திக்கும்போது எழும் ஒளியானதுகடலோசையை ஒத்து இருந்தது. ஆதலால் தேவரீர் திருப்பள்ளியை விட்டு எழ வேணும் என்று மங்களாசாசனம் பண்ணுகிறார்.

உரை:2

சூரியன் கிழக்கே தோன்றிவிட்டான். கருமை இருள் அகன்றுவிட்டது. காலைப் பொழுது மலர்கின்றது, மலர்களில் தேன் ஒழுகுகிறது. தேவர்கள் வந்து எதிர்திசையை நிரப்புகிறார்கள். அவர்களுடன் ஆண் -பெண் யானைகளின் கூட்டமும் வந்துள்ளன. முரசு கடல் அலைபோல அதிர்கிறது. அரங்கனே எழுந்தறள்வாய்.

English Translation

The Sun has risen over the Eastern peak, dispelling darkness, ushering in the morning. Flowers in profusion everywhere have blossomed. Kings and celestials push their way before your sanctum. ‘Their elephants and kettle drums sound like thunder and the rolling sea. Pray wake up, O Lord of Arangam!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்