விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மழைக்கன்று வரைமு னேந்தும்*  மைந்தனே மதுர வாறே,*
    உழைக்கன்றே போல நோக்கம்*  உடையவர் வலையுள் பட்டு,*

    உழைக்கின்றேற் கென்னை நோக்கா*  தொழிவதே,உன்னை யன்றே*
    அழைக்கின்றேன் ஆதி மூர்த்தி!*  அரங்கமா நகரு ளானே!

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அன்று - (இந்திரன் பசிக்கோபத்தாலே ஏழு நாள் விடா மழை பெய்வித்த) அக்காலத்திலே;
முன் - (பசு முதலியவை மழையினால் கஷ்டமடைவதற்கு) முன்பாகவே;
மழைக்கு - மழையைத் தடுப்பதற்காக;
வரை ஏந்தும் மைந்தனே - கோவர்த்தன பர்வதத்தை (கையில் குடையாக) ஏந்தியமிடுக்கையுடையவனே;
மதுர ஆறே - இனிய ஆறுபோல் எல்லார்க்கும் விடாயைத் தீர்ப்பவனே;

விளக்க உரை

பேறு பெறுவதில் விரைவு மிகுதியாலே ஆற்றாமை கரைபுரண்டு பெருமிடறுசெய்து கூப்பிடுகிறார். இந்திரன் பசிக்கோபத்தாலே ஏழுநாள் விடாமழை பெய்வித்து வருத்தப்படுத்தின காலத்தில் கோவர்த்தநகிரியைக் கொற்றக்குடையாக வெடுத்து ஆயரையும் ஆநிரையையும் காத்தருளினவனன்றோ நீ; அப்படி அவர்களைக் காப்பதற்கு அவர்களிடத்தில் ஏன்ன குணம் கண்டுபிடித்தாய்? அவ்விடையருடைய கோஷ்டியிலாவது பசுக்களின் திரளிலாவது அடியேனையும் சேர்த்துக்கொள்ளலாகாதா? என்னும் இரக்கப்பொருள்தோன்ற மழைக்கன்று வரைமுனேந்தும் மைந்தனே! என்கிறார். மதுர ஆறே! - ரக்ஷித்தருளாமல் உபேக்ஷித்தபோதிலும் உன்னைவிட முடியவில்லையே! என்பது கருத்து. ஆறானது ஏரி, குளம் முதலியவைபோலே ஒரிடத்திலேயே இராமல் நாநா தேசங்களிலும் போய்ப் பெருகுவது போல் எம்பெருமான் அடியார் இருக்குமிடங்களிலெல்லாம்போய் ஸேவை ஸாதிததருள்கின்ற ஸௌலப்யமும் இந்த முற்றுவமையால் தோற்று மென்க.

English Translation

O Prince who lifted a mountain against the storm! O River of sweetness! I was caught in the net of fawn-eyed damsels and struggled. Is this fair on you not to take notice? I have none to call but you! O First Lord, Lord of Arangama-nagar!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்