- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்

பாசுரம்
வெள்ளநீர் பரந்து பாயும்* விரிபொழி லரங்கந் தன்னுள்,*
கள்ளனார் கிடந்த வாறும்* கமலநன் முகமும் கண்டு*
உள்ளமே! வலியைப் போலும்* ஒருவனென் றுணர மாட்டாய்,*
கள்ளமே காதல் செய்துன்* கள்ளத்தே கழிக்கின் றாயே!
காணொளி
பதவுரை
விளக்க உரை
எம்பெருமான் பரமபதத்தில் நித்யஸூரிகளோடு பரிமாறுவதை விட்டுவிட்டு இங்கே வந்து கண்வளர்ந்தருளுவது- உண்டியே உடையே உகந்தோடு மிம்மண்டலத்தவராகிய ஸம்ஸாரிகளை வசப்படுத்திக் கொள்வதற்காக வலை வீககிறபடியாதலால் கள்வனார் எனப்பட்டது. வேசியைக் கண்டு பேசவிரும்பியும், சோறுவாங்கி உண்ணக்கருதியும், திருவிழாக்களிலே திரண்டவர்கள் ஏமாந்திருக்கையில் கொள்ளை கொள்ளக்கருதியும் இவ்வாறு பலவகை எண்ணங்களோடே கோவிலுக்குள்ளே புகுந்தவர்களை, வடிவழகு முதலியவற்றைக்காட்டி நாளடைவில், தனக்கு அற்றுத்தீர்ந்த அடியவராம்படி, ஆக்கிக்கொள்ளுகிற எம்பொருமானைக் கள்ளனென்னத் தடையுண்டோ? “செஞ்சொற் கவிகாள்! உயிர் காத்து ஆட்செய்மின் திருமாலிருஞ்சோலை, வஞ்சக்கள்வன் மாமாயன்” என்றாரே நம்மாழ்வாரும்.
English Translation
The Lord with lotus eyes that steal the heart reclines in Arangam where the waters of the river Kaveri flow wide in fragrant blossoming bowers. O Heart, you are indeed hard, you do not realize the Lord. Playing false love games, you pass your life in falsity.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்