- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
விடைக் குலங்கள் ஏழ்அடர்த்து* வென்றிவேற்கண் மாதரார்,*
கடிக்கலந்த தோள்புணர்ந்த* காலி ஆய! வேலைநீர்,*
படைத்து அடைத்து அதில் கிடந்து* முன்கடைந்த நின்தனக்கு,*
அடைக்கலம் புகுந்த என்னை* அஞ்சல் என்ன வேண்டுமே.
காணொளி
பதவுரை
வேலை நீர் - ஜலதத்துவமாகிய கடலை
படைத்து - (முதல்முதலாக) ஸ்ருஷ்டித்தும்
அடைத்து - (ஸ்ரீராமாவதாரத்திலே அக்கடலில்) அணைகட்டியும்;
அதில் கிடந்து - (தங்கள் தங்கள் ஆபத்தை முறையிட்டுக் கொள்வார்க்கு முகங்கொடுக்க) அக்கடலில் பள்ளிகொண்டளியும்
முன் - முன்னொருகாலத்திலே
விளக்க உரை
ஸ்ரீவிபீஷணாழ்வானுக்கு அபயப்ரதாநம் செய்தருளினாற் போலவும் அர்ஜுநனை நோக்கி “மாசுச:” என்றாற்போலவும் அடியேனைநோக்கி அஞ்சேல் என்றருளிச் செய்யவேணும் பிரானே! என்கிறார். “முன்கடைந்த நின்றனக்கு” என்றும் பாடமுண்டு. அஞ்சல்- எதிர்மறை வினைமுற்று.
English Translation
O Cowherd-Lord, you fought the bulls in contest for the Pinnai-dame, you came along with victory and took the lady in your brace. O Lord you made and churned the ocean, slept on it and made a bridge! I seek refuge in you alone, assure me safety, say “No fear”.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்