விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    குரக்கினப் படைகொடு*  குரைகடலின் மீதுபோய்* 
    அரக்கர் அங்குஅரங்க*  வெஞ்சரம் துரந்த ஆதிநீ,*
    இரக்க மண் கொடுத்தவற்கு*  இரக்கம் ஒன்றும்இன்றியே,* 
    பரக்கவைத்து அளந்துகொண்ட*  பற்பபாதன் அல்லையே? 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அரங்க - அழியும்படி
வெம் சரம் - தீக்ஷ்ணமான அம்புகளை
துரந்த - அவர்கள் மேல் பிரயோகித்த
ஆதி - வீரர்களில் தலைவன்
நீ - (எம்பெருமானே;) நீயே காண்க;

விளக்க உரை

யாசகவேஷத்தைப் பூண்டுகொண்டு சென்று யாசிப்பதும், பிறகு யாசகங் கொடுத்தவனுக்குக் குடியிருக்க ஒரு அடிநிலமும் மிகாதபடி ஸர்வஸ்வாபஹாரம் பண்ணுவதும் உனக்குத்தான் ஏற்றிருக்குமென்கிறார் போலும். “இரக்கமொன்று மின்றியே” என்றே பெரும்பாலும் பாடம் வழங்கும்; பெரியவாச்சான்பிள்ளை யருளிச்செய்த வியாக்கியானத்தில் “பூமியில் அவனுக்கு ஒரு பதயாஸமும் சேஷியாதபடி” என்றருளிச் செய்திருந்தலால் “இருக்க ஒன்றுமின்றியே” என்று பாடமிருந்திருக்க வேணுமென்று பெரியோர் கூறுவர். “இரக்கமொன்றுமின்றியே” என்ற பாடத்திலும் வியாக்கியான வாக்கியத்தைப் பொருந்தவிடலாமென்பர். இதில் ஆக்ரஹமுடையோமல்லோம்

English Translation

You took the monkey-army over foaming sea to battle-field, Lord you fought with arrows and you put the Rakshasas to fight. You sought a gift of land and then you mercilessly took the Earth. O Lord of lotus feet, you grew and straddled over all the worlds.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்