விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பூ மருவு நறுங்குஞ்சி புன்சடையாப் புனைந்து*  பூந் துகில் சேர் அல்குற்* 
    காமர் எழில் விழல் உடுத்து கலன் அணியாது*  அங்கங்கள் அழகு மாறி*
    ஏமரு தோள் என் புதல்வன்*  யான் இன்று செலத்தக்க வனம் தான் சேர்தல்* 
    தூ மறையீர் இது தகவோ*  சுமந்திரனே வசிட்டனே சொல்லீர் நீரே             
     

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

தூ மறையீர் - நித்ய நிர்த்தோஷமான வேதத்ததை ஓதியிருக்கிற பிராமணர்களே;
சுமந்திரனே - (ராஜ தர்மத்தை நன் கறிந்து நடத்திப் போந்த ஸுமந்த்ரரே!);
வசிட்டனே - ராஜதர்மங்களை உபதேசித்துப் போருகிற) வஸிஷ்ட மஹர்ஷியே;

விளக்க உரை

நல்ல புஷ்பங்களைச் சூடிப் பரிமளம் விஞ்சக்கடவதான திருக்குழலைச் சடையாகத் திரித்தும், நான் அறுபதினாயிரமாண்டு அரசாண்டு ஸம்பாதித்து வைத்திருக்கம் பட்டுப் பீதாம்பரங்களில் நல்லவற்றைச் சாத்தக்கடவதான திருவரையில் விச்வாமித்ரத்தைக் கயிறாக முறுக்கிச் சாத்தியும், இயற்கையான அழகுக்கு மேலே செயற்கையழகுக்காக ஆபரணங்களைச் சாத்த வேண்டிய அவயங்களில் அவற்றைச் சாத்திக் கொள்ளாமலும் அந்தோ! என் மைந்தன் காட்டுக்குச் சென்றனனே! ஐயோ! இக்காடு இந்தவயதில் அவனுக்குச் செல்லகூடியதா? அறுபதினாயிரமாண்டு போகங்களை புஜீத்துப் பல்விழுந்து தலைநரைத்து உடலிளைத்து உடை குலைப்பட்ட நான் இன்று போகக்கூடியதான காட்டிற்கு எனது மைந்தன் செல்கிறானே இது என்ன அநியாயம். தர்மங்களை அறிந்தும் அநுஷ்டித்தும் உபதேசித்தும் போருகிற மஹாநுபாவர்களே இது நியாயந்தானா நீங்கள் சற்று ஆராய்ந்து சொல்லுங்கள் என்கிறான்.

English Translation

Transforming his fragrant flower coiffure into matted hair, chaitging from soft silk vestured to grass-belt and bax-k-cloth, robbing his limbs of their luster by removing his jewels, my able-bodied son went into the forest where should have gone; O Learned Seers, O Sumantra! O Vasishta! You tell me, is this proper?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்