விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    தளை அவிழும் நறுங் குஞ்சித்*  தயரதன்தன் குல மதலாய்* 
    வளைய ஒரு சிலையதனால்*  மதில்-இலங்கை அழித்தவனே* 
    களை கழுநீர் மருங்கு அலரும்*  கணபுரத்து என் கருமணியே* 
    இளையவர்கட்கு அருள் உடையாய்*  இராகவனே தாலேலோ

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

தளை அவிழும் நறுகுஞ்சி - கட்டு அவிழும்படியான நறுநாற்றமுடைய மயிர்முடியையுடையனான;
தயரதன் தன் - தசரத சக்ரவாத்தியினுடைய;
குலம் மதலாய் - சிறந்த திருக்குமாரனே;
ஒரு சிலை வளைய - ஒப்பற்ற வில்லானது வளைய;
அதனால் - அந்த வில்லாலே;

விளக்க உரை

இளையவர்கட்கு அருளுடையாய்! வாலியை வதைத்து இளையவனான ஸுக்ரீவனுக்கு அருள்புரிந்தான்; இராவணனை வளைத்து இளையவனான விபீஷணனுக்கு அருள்புரிந்தான் என்றிறே பெருமாளுக்கு ப்ரஸித்தி துர்ப்பலர்களாய் இளைத்திருப்பவர்கள் திறத்தில் அருள் செய்பவன் என்றுமாம்.

English Translation

Sleep, O Raghava, benevolent to younger brothers, Talelo! My Dark gem-Lord of Kannapuram where red water-lilies grow everywhere in thickets. Your dark fragrant coiffure keeps slipping. You are the emancipator of Dasaratha’s lineage. You destroyed the fortified Lanka city wielding a matchless bow.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்