விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    அல்லி மலர்த் திருமங்கை கேள்வன் தன்னை நயந்து*  இள ஆய்ச்சிமார்கள்* 
    எல்லிப் பொழுதினில் ஏமத்து ஊடி*  எள்கி உரைத்த உரையதனைக்*
    கொல்லி நகர்க்கு இறை கூடற்கோமான்*  குலசேகரன் இன்னிசையில் மேவிச்* 
    சொல்லிய இன் தமிழ் மாலை பத்தும்*  சொல்ல வல்லார்க்கு இல்லை துன்பந் தானே. (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

இள ஆய்ச்சிமார்கள் - இளமை தங்கிய இடைப்பெண்கள்;
அல்லி மலர் திருமங்கை கேள்வன் தன்னை நயந்து - தாமரைப்பூவில் பிறந்த பிராட்டிக்குக்கொழுநனான கண்ணபிரானை ஆசைப்பட்டு;
எல்லி ஏமப்பொழுதினில் - ராத்ரியின் நடுச்சாமத்திலே;
ஊடி - ப்ரணய கலஹம்பண்ணி;
எள்கி - ஈடுபட்டு;

விளக்க உரை

English Translation

This decad of sweet songs by Kulasekaran, Lord of Kolli city and King of Kudal, Madurai, on the laments of young cowherd dames desirous of blending with the Lord of lotus-dame-Lakshmi in the dead of the night, -- those who master it shall suffer no misery.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்