விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    தரு துயரம் தடாயேல்*  உன் சரண் அல்லால் சரண் இல்லை* 
    விரை குழுவும் மலர்ப் பொழில் சூழ்*  வித்துவக்கோட்டு அம்மானே*
    அரி சினத்தால் ஈன்ற தாய்*  அகற்றிடினும்*  மற்று அவள்தன் 
    அருள் நினைந்தே அழும் குழவி*  அதுவே போன்று இருந்தேனே (2)    

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

விரை குழுவும் - பரிமளம் விஞ்சிய;
மலர் - புஷ்பங்களையுடைய;
பொழில் சூழ் - சோலைகளாலே சூழப்பட்ட;
வித்துவக்கோடு - திருவித்துவக் கோட்டில் எழுந்தருளியிருக்கிற;
அம்மானே - ஸ்வாமியே;

விளக்க உரை

வித்துவக்கோடு என்பதற்கு - வித்வான்கள் கூடிய இடம் என்று காரணப் பொருள் கூறுவர். பிள்ளைப் பெருமாளையங்கார் நூற்றெட்டுத் திருப்பதியந்தாதியில் “ திருவிற்றுவக்கோடு சேர்ந்தார் பிறவி கருவிற்றுவக் கோடுங்காண் “ என்றிருப்பதனால், வித்துவக் கோடு அல்ல; விற்றுவக்கோடு என்பர் சிலர். அவ்விடத்திலும் “ திருவித்துவக்கோடு “ என்றே பாடமென்பர் பெரியோர்: இவ்வளவால் எதுகையின்பம் குன்றாது இத்திருமொழியின் ஈற்றுப் பாசுரத்திலும் இங்ஙனமே பாடமாம். இத்திவ்யதேசம் மலைநாட்டில் “ திருமிற்றக் கோடு “ என வழங்கப் படுகின்றது.

English Translation

O Lord of Vittuvakkodu, surrounded by fragrance-wafting flower groves! If you do not help me overcome the obstacles you place in my path, I have no refuge but you again; just as, even if a mother beats her child in a fit of anger, the child cries to be pacified by the mother alone.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்