விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    அல்லி மா மலர்-மங்கை நாதன்*  அரங்கன் மெய்யடியார்கள் தம்* 
    எல்லை இல் அடிமைத் திறத்தினில்*  என்றும் மேவு மனத்தனாம்* 
    கொல்லி-காவலன் கூடல்-நாயகன்*  கோழிக்கோன் குலசேகரன்*
    சொல்லின் இன்தமிழ் மாலை வல்லவர்*  தொண்டர் தொண்டர்கள் ஆவரே (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அல்லி மாமலர் மங்கைநாதன் - அகவிதழ்களையுடைய சிறந்த (தாமரை) மலரில் பிறந்த பிராட்டிக்குக் கணவனான;
அரங்கன் - ஸ்ரீரங்கநாதனுடைய;
மெய்அடியார்கள் தம் - உண்மையான பக்தர்களுடைய;
என்றும் மேவு மனத்தன் ஆம் - எப்போதும் பொருந்திய திருவுள்ளத்தை யுடையவரும்;
கொல்லி காவலன் - கொல்லிநகர்க்கு அரசரும்;

விளக்க உரை

எல்லையி லடிமைத்திறமாவது- “அடியா ரடியார்தம் மடியா ரடியார்தமக்கடியார் தம் அடியா ரடியோங்களே” என்கிற சேஷத்வகாஷ்டை. அடிவரவு: தேட்டு தோடேறு தோய்த்த பொய் ஆதி காரினம் மாலை மொய்த்து அல்லி மெய். ஸாம்ஸாரிகர் படியில் மிக்க வெறுப்பு உண்டாகி, அவர்களைக் காண்பதும் அவர்களோடு ஸஹவாஸஞ் செய்வதும் அஸஹ்யமான நிலைமை தமக்குப் பிறந்தபடியை அருளிச்செய்கிறார்.

English Translation

This sweet of decad of Tamil songs, by Kulasekara, Ruler of Kolli, King of Kudal(Madurai) saying, “When will I join the band of devotees in Arangam where the Lord resides with lotus-dame Lakshmi?”, --those who master it will be devotees of the Lord.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்