விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கார்-இனம் புரை மேனி நற் கதிர் முத்த*  வெண்ணகைச் செய்ய வாய்*
    ஆர-மார்வன் அரங்கன் என்னும்*  அரும் பெருஞ்சுடர் ஒன்றினைச்*
    சேரும் நெஞ்சினர் ஆகிச் சேர்ந்து*  கசிந்து இழிந்த கண்ணீர்களால்*
    வார நிற்பவர் தாளிணைக்கு* ஒரு வாரம் ஆகும் என் நெஞ்சமே

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கார் இனம் புரை - மேகங்களின் திரளை ஒத்த;
மேனி - திருமேனியையும்;
நல் கதிர் - அழகிய லாவண்யத்தையும்;
முத்தம் வெண் நகை செய்ய வாய் - முத்துக்கள் போல் வெளுத்த புன் சிரிப்பையுடைய சிவந்த திருப்பவளத்தையும்;
ஆரம் மார்வன் - முக்தாஹாரமணிந்த மார்வையுமுடையனான;

விளக்க உரை

பல காளமேகங்கள் திரண்டாற்போன்று விளங்குகின்ற திருமேனியையும், அத்திருமேனியில் ஓடுகின்ற விலக்ஷணமான லாவண்யத்தையும், முத்துவரிசை போன்ற புன் முறுவலையுமுடைய திருவதரத்தையும், முத்துமாலையணிந்த திருமார்பையுமுடையனான ஸ்ரீரங்கநாதனென்கிற ஒரு பரஞ்சோதியை அடிபணிந்து கண்ணுங் கண்ணீருமாய் நிற்கும் ஸ்ரீவைஷ்ணவர்களுக்கே என் நெஞ்சமானது அநந்யப்ரயோஜநமாய் ஆட்பட்ட தென்கிறார்.

English Translation

The Lord of Arangam has a dark frame like gathered monsoon-clouds, with a soft radiance, a pearly-white smile, coral-red lips, and a garlanded chest. Devotees shed tears with love in their hearts and stand waiting for a glimpse of that rare sight. My heart is a slave at their holy feet.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்