விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வெளிய சங்கு ஒன்று உடையானைப்*  பீதக ஆடை உடையானை* 
    அளி நன்கு உடைய திருமாலை*  ஆழியானைக் கண்டீரே?* 
    களி வண்டு எங்கும் கலந்தாற்போல்*  கமழ் பூங்குழல்கள் தடந்தோள் மேல்* 
    மிளிர நின்று விளையாட*  விருந்தாவனத்தே கண்டோமே*       

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பீதகம் ஆடை உடையானை - பீதாம்பரத்தை உடையாகக்கொண்டவனாய்
நன்கு அளி உடைய - நன்றாகக் கருபையுடையவனாய்
ஆழியானை - திருவாழியாழ்வானை யுடையவனாய்
திருமாலை - ச்ரிய, பதியான கண்ணனை
களிவண்டு - (மதுபானத்தாலே) களித்துள்ளவண்டுகளானவை.

விளக்க உரை

உரை:1

கடல்போலே கறுத்த திருமேனிக்குப் பரபாகமான வெண்மையையுடைய விலக்ஷணமான ஸ்ரீபாஞ்சந்யத்தைகையிலேயுடையனும், பீதாம்பரதரனும், பிராட்டியோட்டைச் சேர்த்யடியாக கருணையுடையனும் திருவாழியாழ்வானை யுடையனுமான பெருமானைக கண்டதுண்டோ? மதுபானத்தாலே மதித்தவண்டுகள் பரம்பினாற்போல, பரிமளப்ரசுரமாய் அழகான திருக்குழல்களானவை திருத்தோள்களிலே நிறலைய விளையாடா நிற்க விருந்தாவத்திலே கண்டோம். வெளிய - வெள்ளிப் என்பதன் தொகுத்தல். இப்பாட்டுக்கு அழகிய மணவாளச்சீயர் மூலத்தின்மேல் பொருள் அரளிச்செய்யும்போது ‘வெளியசங்கொன்றுடையானை, என்றதன் பக்கத்திலே ஆழியானை என்பதைக்கொண்டு சேர்த்து “***“ (பாடக்ரமாத் அர்த்தக்ரமோ பலீயாந்) என்கிற ந்யாயத்தாலே “வெளிசங்கொன்றுடையானை ஆழியானை” என்று அந்வயித்துப் பொருள் கொள்ளுதல் நான்று என்றருளிச்செய்து, மேலே வியாக்கியானம் ஸேவிக்குமிடத்து.

உரை:2

வெண் சங்கு உடையவனை, மஞ்சள் ஆடை உடுத்தியவனை ,இரக்கமும் அன்பும் நன்றாகவே கொண்ட திருமாலை,  சக்கரம் உடையவனைக் கண்டீர்களா ? (என்னடா..போன பாடல் வரை திட்டிட்டு இருந்தவள் இந்தப் பாடலில் இரக்கம் நன்கு கொண்ட திருமால் என்கிறாளே மனம் திருந்திவிட்டாளா என ஐயம் வேண்டாம்.. எந்த ஒரு சொல்லையும் சொல்கின்ற விதம் என ஒன்று உண்டில்லையா? அளி உடையவன் என்று சொல்லல அளி நன்கு உடையவன் என்கிறாள்..சற்றே எள்ளலாக..வஞ்சப்புகழ்ச்சி அணி என்றே உண்டு தமிழில்..ஒருவரைப் புகழ்வது போல இகழ்வது..இகழ்வது போலப் புகழ்வது..இவள் புகழ்வது போல இகழ்கிறாள்..திருமால் இரக்கமுடையவன் என்று சொன்னால் ஆமாமா நல்ல இரக்கமுடையவன் என்று சற்று ஏளனப் புன்னகையோடு சொன்னால் எப்படி இருக்குமோ அப்படிக் கற்பனை செய்துகொள்ளுங்கள் ..அடையாளம் சொல்கிறாள்.. வெண்சங்கு வச்சிருப்பான்..சக்கரம் வச்சிருப்பான்..மஞ்சள் நிறத்தில் ஆடை உடுத்தி இருப்பான்..அன்பு தான..நல்லா உடையவன் ம்க்கும்.. அவனைப் பார்த்தீங்களா..? )

English Translation

“The Lord has a white conch, beautiful discus, and yellow robes. Did you see this Tirumal, Lord of immense compassion?” “With tresses on shoulders hovering like bees over his lotus-face, we saw him in Brindavana”.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்