விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    போர்க்களிறு பொரும்*  மாலிருஞ்சோலை அம் பூம்புறவில்* 
    தார்க்கொடி முல்லைகளும்*  தவள நகை காட்டுகின்ற* 
    கார்க்கொள் பிடாக்கள் நின்று*  கழறிச் சிரிக்கத் தரியேன்* 
    ஆர்க்கு இடுகோ? தோழீ !*  அவன் தார் செய்த பூசலையே*. 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

போர் களிறு - போர் செய்வதையே தொழிலாகவுடைய யானைகள்
பொரும் - பொருது விளையாடுமிடமான
மாலிருஞ் சோலை - திருமாலிருஞ் சோலை மலையினுடைய
அம்பூ புறவில் - மிகவுமழகிய தாழ்வரைகளிலே
தார் கொடி முல்லைகளும் - அரும்புகளையுடைய கொடி முல்லைகளும்

விளக்க உரை

யானைகள் கரைபொருது விளையாடா நிற்கப்பெற்ற திருமாலிருஞ்சோலை மலைச்சாரல்களில் அரும்புகொண்டு விளங்குகின்ற கொடி முல்லைகளானவை, அவ்வெம்பெருமான் ஸம்போக ஆரம்ப ஸமயத்திற் பண்ணும் புன்முறுவலை நினைப்பூட்டிக்கொண்டு என்னைத் துன்பப்படுத்தாநின்றன. அதற்குமேலே, படாக்களானவை புஷ்பித்து, ஸம்ஸ்லேஷம் நடந்தேறின பின்பு ஒரு தலையில் வெற்றிக்கு ஈடாகப்பண்ணும் பெருஞ்சிரிப்பை நினைப்பூட்டாநின்றுகொண்டு என்னை உருவழிக்கின்றன. தோழீ! அவ்வெம்பெருமான் திருத்தோளில் சாத்திக் கொண்டிராநின்ற மாலையை ஆசைப்பட்டமையாலன்றோ நான் இப்படிப்பரிபவப்பட நேர்ந்தது! இந்தபரிபவத்தை நான் யாரிடத்திற்சென்று முறையிட்டு ஆறுவேன் என்கிறாள். புறவு - சோலைகள் நிரம்பிய ஆராமம். தவளம் - யவனா என்றவடசொல் விகாரம். காட்டுகின்ற - வினைமுற்று. படாக்கள் - பெருங்கொடிகள் கார்க்கொள்ளுகை - அழகுகொண்டிருக்கையுமாம்.

English Translation

In the rolling groves of Malirumsolai where heavy tuskers play, the winsome smile of the full-blossomed Mullai creeper, and the hearty laugh of the twining Pata flowers are unbearable. Woe to me that I desired his Tulasi garland, O Sister!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்