விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    முற்றிலாத பிள்ளைகளோம்*  முலை போந்திலா தோமை*  
    நாள்தோறூம் சிற்றில் மேலிட்டுக்கொண்டு*  நீசிறிதுண்டு திண்ணென நாமது கற்றிலோம்*
    அடலையடைத்து அரக்கர் குளங்களை*  முற்றவும் செற்று*  
    இலங்கையைப் பூசலாக்கிய சேவகா!*  எம்மை வாதியேல்* 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கடலை அடைத்து - ஸேதுபந்தம்பண்ணி
அரக்கர் குலங்களை முற்றவும் - ராக்ஷஸருடைய குலங்களை முழுதும்
செற்று - களைந்தொழித்து
இலங்கையை - லங்கையை
பூசல் ஆக்கிய - அமர்க்களப்படுத்தின

விளக்க உரை

உரை:1

‘கண்ணபிரான் இன்னது செய்தான்’ என்று பிறர்க்குச் சொல்லமுடியாதபடி அவன் சில குறும்புகளைச் செய்ய, அது கண்ட ஆய்ச்சிகள், ‘அப்பா! நெஞ்சில் நினைத்தபடி சில செய்யும் அவ்வளவேயோ வேண்டுவது? எங்கள் பருவத்தைச் சிறிது ஆராயவேண்டாவோ? (“முல்லையேப முழுமுற்றும் போந்தில” என்றபடி) கொங்கை இன்னுங் குவிந்தெழுந்திலாத எங்கள் திறத்து நீ செய்யும் குறும்புகளுக்கு நாங்கள் கருத்து அறியும்படி குருகுலவாஸம் பண்ணி ஒன்றுங்கற்றிலோம்’ நீயோ ஒரு பெண்பெண்டாட்டிக்காக வானரப்படை திரட்டிக் கடலில் அணைகட்டி அரக்கர் குலங்களை வேரற வொழித்த மஹாவீரனாயிராநின்றாய்’ அபலைகளான நாங்கள் உன்னுடைய பலத்திற்கு ஈடுகொடுக்கவல்லோமல்லோம்’ ஆகையால், பிரானே! எம்மை நீ நலியாதே கடக்கப்போகவேணு மென்கிறார்கள்.

உரை:2

முதிர்ச்சி பெறாத இளம் பிள்ளைகள் நாங்கள் முலை கூட சரியாக வளராத எங்களை நாள்தோறும் நாங்க கட்டும் சின்ன வீட்டு மேல் ஏறிக் கொண்டு
 நீ செய்யும் செயல்கள் சில உண்டு  அதை முறிக்கும் வல்லமை நாங்கள் கற்க வில்லை கடலை அடைத்து (அணை கட்டி ) அரக்கர் குலங்களை முழுமையா அழிக்கவும் பகையை  இலங்கைக்கே சென்று   சண்டையிட்டு வென்ற வீரமுடையவனே செயலில் வேகம் கொண்டவனே எங்களைத் துன்புறுத்தாதே

English Translation

Your words will be sweet when spoken to dainty damsels. Do not waste them on us innocent ones. O Lord of ocean hue, Lord who bridged the ocean strait! Upon your wives we swear, do not break our sand castles.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்