விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    தொழுது முப்போதும் உன் அடி வணங்கித்*  தூமலர் தூய்த் தொழுது ஏத்துகின்றேன்* 
    பழுது இன்றிப் பாற்கடல் வண்ணனுக்கே*  பணிசெய்து வாழப் பெறாவிடில் நான்* 
    அழுது அழுது அலமந்து அம்மா வழங்க*  ஆற்றவும் அது உனக்கு உறைக்கும் கண்டாய்* 
    உழுவதோர் எருத்தினை நுகங்கொடு பாய்ந்து*  ஊட்டம் இன்றித் துரந்தால் ஒக்குமே*  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

முப்போதும் - (இரண்டு சந்தி, உச்சிப் போது ஒன்று ஆகிய மூன்று காலங்களிலும்
தொழுது வணங்கி - ப்ரணாமபூர்வமாக (உன்னை) ஆச்ரயித்து
உன் அடி - உன்பாதங்களில்
துதூ மலர்தூய் - பாரிசுத்தமான புஷ்பங்களைப் பணிமாறி
தொழுது - ஸேவித்து

விளக்க உரை

உரை:1

ஸாத்விகராயிப்பார் பகவதாராதநம் பண்ணித்தலைக் கட்டினபிறகு திருவடிகளிலே விழுந்து ‘நான் தொடங்கின திருவாராதநத்தைத் தலைக்கட்டினேன், திருவுள்ளத்திற்குப் பாங்கானபடியே போது போக்கியருளவேணும்’ என்று ஸ்தோத்ர ரூபமானவற்றை விண்ணப்பஞ் செய்வது போல், இவள் மன்மதனிடத்திற் சில விண்ணப்பஞ் செய்கிறாள். “தூரிமலர்தூவி” என்ற பாடம் மறுக்கத் தக்கது. “ஏத்துகின்றேன்’ என்பதை, வினைமுற்றாகவும், வினையாலணையும் பெயராகவுங் கொள்ளலாம். (பழுதின்றி) பணிசெய்கையில் பழுதில்லாமையாவது - ஸ்வப்ரயோஜநத்வ புத்தி கலசாமல் கைங்கரியம் பண்ணுகை’ “மற்றைநங் காமங்கள் மாற்று” என்றது காண்க. “வழுவிலா அடிமை செய்யவேண்டும்” என்றார் ஆழ்வாரும். நான் இத்தனை காரியஞ்செய்து உன்னடி பணியச் செய்தேயும் நீ உபேக்ஷித்து என்னைக் கண்ணபிரானோடு கூட்டாதொழிவையாகில், நான் துக்கம் பொறுக்கமாட்டாமல் மிகவு மழுது அம்மா! என்று கதறித் திரியும்படி நேரிடும்’ அந்தப் பாதகம் உன்தலைமேலேறும் ஆதலால் நீ என்னை உபேக்ஷி தொழியவேனுமென்கை மூன்றாமடியின் கருத்து. பெரிய வாச்சான்பிள்ளை வியாக்கியானம்   சரணாகதனை நோக்காவிட்டால் இவனுடைய பாபபலத்தை அவன் அநுபவித்து அவனுடைய ஸுக்ருதபலம் இவன் பக்கலிலே வருவதாகச் சொல்லாநின்றதிறே’ அப்படியே உன்னைக் குறித்து நான் பண்ணின் ஆச்ரயணத்துக்கு ஒருபலின்றிக்கே யொழியுமாகில் அது உனக்குப் பொல்லாதாங்கிடாய்.” என்பதாம். கடையடியின் கருத்து:-நான் உனக்கு இன்றளவுஞ் செய்த பணிவிடைகளை நீ ஏற்றுக்கொண்டு என் காரியத்தைச் செய்து முடிக்காமற் போவது - உழவன் தன் ஜீவநத்துக்காக எருதினிடத்தில் பூர்ணமாக வேலையை வாங்கிக் கொண்டு, பின்பு அதற்குத் தீனி இடாமல் நுகத்தடியால் அடித்துத் தள்ளி ஒட்டுவது போலாம். கொடு - கொண்டு என்பதன் சிதைவு.

உரை:2

மூன்று வேளைகளும் உன்னைத் தொழுது உன் திருவடி வணங்கித் தூய்மையான மலர் கொண்டு வேண்டுகின்றேன் எந்தக் குறையுமின்றி பாற்கடல் கண்ணனுக்கே பணி செய்து வாழும் பாக்கியம் பெறாவிடில் நான் அழுது அழுது தடுமாறிப் போய் நான் அம்மா வென அரற்ற மிகவும் அது உனக்கு உறைக்கும் அளவு வலிக்கும் கண்டாய் உழுகின்ற எருதினை ஏர் பிடித்த நுகம் கொண்டே இடித்து அதைத் துடிக்க வைத்து அதற்கு உணவு கொடுக்காம ஒதுக்கினாப் போல பாவம் வரும். 

English Translation

O God of Love! Thrice a day I strew fresh flowers at your feet. Like a plough bullock beaten with a staff and turned out without food or water, if I am denied the life of faultless service to Krishna, the Ocean hued Lord, I will weep and stumble, and cry “Mother!” which will hurt you sorely, so mind!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்