விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    சிற்றஞ் சிறுகாலே வந்து உன்னைச் சேவித்து*  உன்- பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்* 
    பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்திற் பிறந்து*  நீ- குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது* 
    இற்றைப் பறைகொள்வான் அன்று காண் கோவிந்தா*  எற்றைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும்*  உன்தன்னோடு- 
    உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்*  மற்றை நம் காமங்கள் மாற்று ஏலோர் எம்பாவாய். (2)      

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கோவிந்தா - கண்ணபிரானே!
சிற்றம் சிறுகாலை - விடி காலத்திலே
வந்து - (இவ்விடத்தேற) வந்து
உன்னை சேவித்து - உன்னைத் தெண்டனிட்டு
உன் பொன் தாமரை அடி போற்றும் பொருள் - உனது அழகிய திருவடித் தாமரைகளை  மங்களாசாஸநம் பண்ணுவதற்குப் பிரயோஜனத்தை

விளக்க உரை

உரை:1

கீழெல்லாம் “பறை, பறை” என்று சொல்லி வந்த ஆய்ச்சிகள் அப்பறையின் பொருளை நிஷ்கர்ஷித்து விண்ணப்பஞ்செய்யும் பாசுரம், இது. ‘நாட்டார் இசைகைக்காக ‘நோன்பு’ என்று ஒன்றை வியாஜமாகக் கொண்டு வந்து புகுந்தோமத்தனை யொழிய, எங்களுக்கு உத்தேச்யம் உன் திருவடிகளில் நித்திய கைங்கரியம் பண்ணுகைதான்; இனி ஒரு நொடிப்பொழுதும் உன்னைவிட்டு நாங்கள் பிரிந்தோமாக வொண்ணாது; வேறு ஒருவகையான விருப்பமும் எமக்குப் பிறவாவண்ணம் நீயே அருள்புரியவேணும்’ என்று காலைக்கட்டுகிறார்கள். சிற்றஞ்சிறுகாலை – அருணோதய காலத்தைக் கூறியவாறு. ‘சின்னஞ்சிறுப் பையன், செக்கச் சிவந்த தலை’ என்னும் பிரயோகங்களை யொக்கும் இப்பிரயோகம். “சிற்றஞ்சிறுகாலே” என்றும் ஓதுவர்’ “காலைவந்து” என்னாமல், ‘சிறுகாலைவந்து’ என்னாமல், “சிற்றஞ்சிறு காலை வந்து” என்றதற்குக் கருத்து – எங்கள் பருவத்தை ஆராய்ந்தால் பொழுது விடிந்து பதினைந்து நாழிகையானாலும் குளிருக்கு அஞ்சிக் குடிலைவிட்டுக் கிளம்பமாட்டாதாரென்று தோற்றுநிற்க, குளிரை ஒரு பொருளாக நினையாமல் நாங்கள் இத்தனை சிறு காலையில் வந்தது எவ்வளவு ஆற்றாமையின் கனத்தினாலாகக் கூடுமென்பதை ஸர்வஜ்ஞனான நீயே ஆய்ந்தறிந்துகொள் என்றவாறு. “உன் பொற்றாமரை யடியே போற்றும் பொருள் கேளாய்” என்றது – நாங்கள் எதை உத்தேசித்து உன்னைக் காப்பிடுகின்றோமோ அந்த உத்தேசத்தை வெளியிடுகின்றோம், கேட்டருள் என்றபடி. அந்த உத்தேசத்தை வெளியிடுகின்றன, மற்ற அடிகள்.

உரை:2

"விடியற்காலையில் உன்னை வழிபட்டு, உன் தாமரை மலரைப் போன்ற மென்மையான திருவடிகளைப் போற்றி நாங்கள் விரும்பியவைகளைக் கொடுத்து அருள் செய்யவேண்டும். பசுக்களை மேய்த்து, ஜீவனம் செய்யும் ஆயர்குலத்தில் எங்களைப் போன்றே அவதரித்த நீ, எங்களிடமிருந்து சிறு கைங்கரியமாவது பெற்றுக் கொள்ளாமல் செல்வது கூடாது. உன்னிடமிருந்து, பறை வாத்தியம் போன்ற பொருள்களைப் பெற்றுக் கொண்டவுடன், உன்னை விட்டு அகல நாங்கள் இங்கு வரவில்லை. காலம் உள்ளவரை, மேலும் மேலும் மீண்டும் பிறவியெடுப்பினும், உன்னுடைய உறவினர்களாகவே இருப்போம். உனக்கே நாங்கள் பணி செய்து கிடப்போம். உன் மீது அளவிலா பற்று கொண்டுள்ள எங்களுக்கு, மற்ற பொருள்களின் மீது ஏற்படும் ஆசையை தவிர்தருள வேண்டும்."

English Translation

Govinda! In the wee hours of the morning we have come to worship you and praise your golden lotus feet; pray hear our purpose. You were born in the cowherd clan, now you cannot refuse to accept our service to you. Know that these goods are not what we came for. Through seven lives and forever we would be close to you, and serve you alone. And if our desires be different, you must change them.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்